Wednesday, March 11, 2015

நாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்




சில நாட்களுக்கு முன்பு, மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லியிருந்தார். அந்த கருத்தை ஆமோதித்து, நான்கு வருடங்களுக்கு முன்பு(2010) எங்கள் தமிழ் பள்ளி ஆண்டு விழாவில் நான் எழுதி மாணவர்களை நடிக்க வைத்த இந்த நாடகத்தை இங்கு பதிகிறேன். அந்த ஆண்டு விழாவில், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குனர் முனைவர் ப.அர.நக்கீரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு,தன்னுடைய உரையில்  இந்த நாடகத்தைப் பற்றி பெருமையாக பேசியது எனக்கு அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் இந்த நாடகம் தான் என்னுடைய முதல் சிறுவர் நாடகம். அந்த ஊக்கம் தான் என்னை மேலும் பல சிறுவர் நாடகங்களையும் சிறுவர் கலந்துரையாடல்களையும் எழுத வைத்தது. இந்த நாடகத்தில் நடித்த குழந்தைகளின் புகைப்படங்கள் என்னிடம் இல்லாததால்,அவர்களின் புகைப்படத்தை வெளியிடமுடியவில்லை. இன்னும் பள்ளி ஆண்டுவிழாவிலும்,சிட்னி சைவ மன்ற சேக்கிழார் விழாவிலும் மேடையேற்றிய மூன்று சிறுவர் நாடகங்களை புகைப்படங்களோடு விரைவில் இங்கு பதிகிறேன். 


                                    நாரதரின் சிட்னி விஜயம்

காட்சி 1:

இடம்: சிட்னி சிட்டி ஏரியா.

நாரதர்:  " நாராயணா ! " " நாராயணா ! " .

(இரண்டு மாணவிகள் அவரை பார்த்து பேசிக்கொண்டு வருகிறார்கள்)

மாணவி - 1 :  Look him ya!! Who is this guy? Looks like a comedian.

மாணவி - 2 :  I think he is acting in a drama. I will check.

(இரண்டாம் மாணவி நாரதரிடம் விசாரிக்கிறார்).

மாணவி - 2 :  Excuse me, you are looking different. What’s your name and where you are from? 

நாரதர்: (திரு திருன்னு முழித்துக்கொண்டு) , I, நாரதர்.

மாணவி - 2 : What  நாதா?

நாரதர்: (மனதிற்குள்), இது நல்ல இருக்கே, ஆமாம் நாதா தான் நாதா தான்.

மாணவி - 1 : Do you know English?

நாரதர்: I know small small English. ஆனா  I know very big tamil.

மாணவி - 1 :  Oh! Tamil. our origin is tamilnadu but we don’t know tamil.

மாணவி - 2 :  Are you too from tamilnadu??

நாரதர்: இல்லை, இல்லை, (ஐயையோ இவுங்களுக்கு தமிழே தெரியாதே
சரி BUTLER  இங்கிலீஷ்ல தான் பேசணும்) . No No , I I come from தேவலோகம்.

மாணவி - 1 :   Devalogam !!! Where is it? Is it in Antartica??

நாரதர்: நாராயணா! நாராயணா! . தேவலோகத்தைப் போய் அண்டார்டிகாவில்  இருக்கான்னு கேக்குதுங்கலே. ஞான சூன்யங்களா!!

மாணவி - 2 :  சூன்யங்களா? what is it?

நாரதர்: (என்னத்தை சொல்றது?)  ஒண்ணுமில்லை.

மாணவி - 2 :   Wait!  wait! . Now I  remember my grandma shows a picture like you and said that “Naradhar”.  Are you the same naradhar? But in that photo he wores dhoti and not phant.

நாரதர்: (சந்தோஷத்தில் குதிக்கிறார்). அப்பாடா. என்னைய
கண்டுப்பிடிசிட்டாங்க.  Yes , Yes . I Come to Sydney change to phant.

(இவங்ககிட்ட english கத்துக்க வேண்டியது தான்.) தயவு செய்து me teach English.

                 (இரண்டு பேரும் பேசிக்கொள்கிறார்கள்)

If we teach English, then we will forget our English and start speaking like him.

(அவர்கள் ஓடுகிறார்கள்)

நாரதர்: நாம் english கத்துக்கமுடியாது போலிருக்கே. சரி ஊரையாவது சுத்திப் பார்க்கலாம்.

காட்சி 2:

இடம்: liverpool ஏரியா.
(நாரதர் train ஏறி liverpool வருகிறார்)
(அப்போது 2 மாணவர்கள் englishல் பேசிக்கொண்டு போகிறார்கள்)

நாரதர்: என்னது இவுங்களை பார்த்தால் தமிழ் பிள்ளைகள் போல தெரிகிறார்கள், ஆனால் தமிழே தெரியாதா?

(அப்பொழுது ஒருவர் தமிழ் புத்தகத்தோடு வருகிறார். அங்கிருந்த மாணவர்கள் அவரைப் பார்த்து வணக்கம் சொல்கிறார்கள், அவரும் வணக்கம் கூறுகிறார்).

நாரதர்: வணக்கமா! ஐயா உங்களக்கு தமிழ் தெரியுமா? சரி சரி, தமிழ் புத்தகம் எல்லாம் வச்சிருக்கீங்களே.

தமிழ் பள்ளி முதல்வர்: தமிழ் நல்லா தெரியும். ஆமாம் நீங்கள் வேட்டி கட்டியிருந்தால் இந்த நாரதர் வேஷம் நல்லா இருந்திருக்கும்.

நாரதர்:  நான் நாரதரே தாங்க.

தமிழ் பள்ளி முதல்வர்: அப்போ இதென்ன வேஷம்? ஜீன்ஸ் phant எல்லாம் போட்டுக்கிட்டு.

நாரதர்: ஹி!!! ஹி! (அசடு வழிகிறார்).  வேட்டி தான் கட்டினேன். trainla வரும்போது வேட்டி மாட்டிக்கிச்சு. அதனால phantikku மாறிட்டேன்.

தமிழ் பள்ளி முதல்வர்: சரி சரி. அமாம் உங்கள் சிட்னி விஜயத்தின் நோக்கம் தான் என்ன?
நாரதர்: நான் என்னுடைய இங்கிலீஷ் திறமையை வளர்த்துக்கலாம் என்று இங்கு வந்தேன்.

(அப்போது 2 மாணவர்கள் தாங்கள் பார்த்த தமிழ் படத்தைப் பற்றி தமிழில் பேசிக்கொண்டு போகிறார்கள்)

நாரதர்: ஆஹா ! இங்கே தமிழ் படம் எல்லாம் வருமா? எந்திரன் கூட வந்துதா?

தமிழ் பள்ளி முதல்வர்: நீங்க வேற! இங்க நிறைய தமிழ் படம் எல்லாம் வரும். நான் கூட எந்திரன் படத்தை முதல் நாளே பார்த்தேன். இங்கு நிறைய தமிழ் நிகழ்சிகள் எல்லாம் நடக்கும். இங்கு பாலர் மலர் தமிழ் பள்ளிகளில் தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

நாரதர்: ! சிட்னியில் தமிழ் பள்ளி கூடம் எல்லாம் இருக்கிறதா?

தமிழ் பள்ளி முதல்வர்: ஆமாம் 5 பள்ளிகள் இருக்கிறது. நான் கூட அதில் ஒரு பள்ளியில் முதல்வராக இருக்கிறேன்வாங்களேன் தமிழ் பள்ளிக்கு போகலாம்

காட்சி 3: 

இடம்: Holsworthy தமிழ் பள்ளி
(5 மாணவிகள் சந்திக்கிறார்கள்)

மாணவி -1 : Hi, How are you?

மாணவி -2 : ஹே நீ என்ன தமிழில் பேச மாட்டியா?

மாணவி -1 : I don’t want to talk tamil.

மாணவி -3 : ஏன்? நம்முடைய FRENCH , GERMAN  நண்பர்கள் எல்லாம் அவர்களுடைய மொழியில் தானே பேசுகிறார்கள்பிறகு நாம் ஏன் தமிழில் பேசக்கூடாது?

மாணவி -1 : அவர்களுடைய அப்பா அம்மா அவுங்களோட இங்கிலிஷ்லேய பேச மாட்டர்கள். ஆனால் என்னோட அப்பாவும் அம்மாவும் தமிழ்லேய பேச மாட்டார்கள். அதனால் தான் எனக்கு தமிழில் பேச புடிக்கலை.

மாணவி 4: (சிரித்து) அது எல்லாம் அவுங்களோட ஆங்கிலத் திறமையை வளர்த்து கொள்ளத்தான் நம்மிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்

மாணவி 3 : நீ அவர்களுக்கு தமிழில் பதில் கூறு. இரண்டு பேரும் அவங்க அவங்க திறமைய வளத்துக்கலாம் தானே.

மாணவி -5 : எனக்கு தமிழ் வீட்டுப்பாடம் எல்லாம் என் பாட்டி தான் சொல்லிக்கொடுக்கிறார்கள்

மாணவி -2 : நமக்கு தமிழில் டெஸ்ட் வைக்கிற மாதிரி நம்மோட 
பெற்றோருக்கும் ஆத்திச்சுடி, திருக்குறளில் எல்லாம் டெஸ்ட் வைக்கணும்.

(எல்லோரும் சிரிக்கிறார்கள்)

மாணவி -1 : அவ்வளவுதான்! நிறைய பெற்றோர் பெயில் ஆக வேண்டியது தான். பிறகு அவர்களுக்குன்னு ஒரு தமிழ் பள்ளிக் கூடம் ஆரம்பிக்க வேண்டும்.

மாணவி 3 : சரி நாம வேற எதாவது பேசலாமா. 

மாணவி -4 : இந்தியன் படத்துக்கும் எந்திரன்  படத்துக்கும் என்ன வித்தியாசம் என்று யாருக்காவது   தெரியுமா?

(எல்லோரும் யோசிக்கிறார்கள்)

மாணவி -1 : இந்தியன்ல ஹீரோ வை தாத்தா வாக காட்டுவாங்க. எந்திரன்  தாத்தா வை ஹீரோ வாக காட்டுவாங்க.

(அப்போது ஒரு மாணவியின் அம்மா வருகிறார்)

அம்மா: இது தான் நீங்கள் தமிழ் படிக்கிற அழகா?

மாணவி -4 : தமிழ் படத்தை பார்த்தா தமிழ் ஈசியாக கத்துக்கலாம் அம்மா, சரி இன்னைக்கு ஒரு தமிழ் பட dvd வாங்கிட்டு வாங்க.
அம்மா : படத்தை பார்த்துட்டு சும்மா இருந்தா பரவால்லை. நேற்று என்ன சொன்ன! "நான் ஒரு வேலைய ஒரு தடவ செஞ்சா நூறு தடவ செஞ்ச மாதிரின்னு சொல்ற. அப்புறம் என்னடான்ன, உங்கப்பாகிட்ட ஒரு சேலை வாங்கிக்கொடுங்கன்னு கேட்டா, நீ நடுவுல பூந்து "அதிகமா ஆசைப் படுகிற பெண் நிம்மதியா வாழந்ததாக சரித்திரமே கிடையாதுன்னு" ஒரு பிட்ட போட்டே. உடனே உங்கப்பாவும், ஆஹா என் மகள் சொன்னா சரியாதான் இருக்கும்னு சொல்லி வாங்கித் தரலை. நீ இந்த மாதிரி பேசுனா நான் எப்படி தமிழ் பட dvd வாங்க முடியும்.

மாணவி -4 : இப்படி பேசுவது எல்லாம் என்னடோ தமிழ் திறமை வளர்பதற்குத் தான் அம்மா.


(அப்போது நாரதர் அவர்களிடம் வருகிறார்)

நாரதர்: நான் உள்ளே வரலாமா?

மாணவி -5 : அதான் உள்ளே வந்துட்டிங்களே. அப்புறம் என்ன கேள்வி உள்ளே வரலாமா என்று?

மாணவி -1 : நீங்கள் westmead கோவில் குருக்களா இல்ல helensburgh கோவில் குருக்களா?

நாரதர்: நான் தான் நாரதர். தேவலோகத்திலிருந்து வருகிறேன்.

(எல்லோரும் வணக்கம் கூறுகிறார்கள்)

நாரதர்: சிட்னியில் நீங்கள் தமிழ் பேசுவதை கேட்பதற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது.

சிறுவன் 1: நாரதரே நீங்கள் எங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறிங்களா?

சிறுவன் 2: ஆமாம் ஆமாம், நீங்களே எங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுங்க

(அப்போது தமிழ் தாய் அங்கு விஜயம் செய்கிறார்)

 தமிழ் தாய்: என்ன நாரதா உன் சிட்னி விஜயம் நன்றாக உள்ளதா?
(எல்லோரும் வணங்குகிறார்கள்)

நாரதர்: தமிழ் தாயே, இங்கே நம் தமிழ் பிள்ளைகள் எல்லாம் மிக அருமையாக தமிழ் பேசுகிறார்கள். மேலும் அவர்கள் என்னை இங்கு தமிழ் சொல்லிக் கொடுக்க சொல்கிறார்கள். அதனால் நான் இங்கு சில காலம் தமிழ் சொல்லிக் கொடுக்கப்போகிறேன்

தமிழ் தாய் : ரொம்ப நல்ல முடிவு நாரதா. இங்கு படிக்கும் எல்லா தமிழ் குழந்தைகளுக்கும் என்னோட ஆசிகள் எப்பவும் உண்டு.

தமிழ் பள்ளி முதல்வர்: இங்கு வந்திருக்கும் பெற்றோர்களே, நாரதரே தேவலோகத்தை விட்டு விட்டு நம் பாலர் மலர் பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க போகிறார் என்றால் எவ்வளவு பெரிய விஷயம். ஆகையால் நீங்கள் உங்கள் தமிழ் நண்பர்களிடம் எல்லாம் சொல்லி அவர்களின் குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பச் சொல்லலாமேநம் பாலர் மலர் 4 பள்ளிகளிலிருந்து 5 பள்ளிகளாக உயர்ந்து இருக்கிறது. அது மேலும் மேலும் உயர உங்களின் ஆதரவு என்றென்றும் வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்.

(எல்லோரும் - வாழ்க தமிழ்! வளர்க தமிழ் என்று சொல்லுகிறார்கள்)