Tuesday, January 27, 2015

ஆஸ்திரேலிய தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டில் படைத்த கட்டுரை



இரண்டு நாட்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கு முதன் முதலாக தமிழ் ஆசிரியர்கள் மாநாடு வெற்றிக்காரமாக நடைபெற்றது. (முடிந்தால் அந்த நிகழ்வை மட்டும் ஒரு பதிவாக எழுதுகிறேன். ). சிங்கப்பூரிலிருந்தும், கனடாவிலிருந்தும் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களிலிருந்தும் தமிழ் ஆசிரியர்கள்,அறிஞர்கள் வந்திருந்தார்கள். அடியேனும் எங்கள் பள்ளி (பாலர்மலர் தமிழ் பள்ளி ஹோல்ஸ்வோர்தி கிளையின்) சார்பாக, 
மத்திமப் பருவத்து மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் 
என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி, அதற்கான பவர் பாயிண்ட் பிரசன்டேஷனோடு அன்று மதியம் நடைபெற்ற அமர்வில் படைத்தேன். இந்த கட்டுரையில் நான் கூறியுள்ள யுத்திகள் அனைத்தும், என்னுடைய வகுப்பில் நான் பின்பற்றிய யுத்திகளாகும். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் இந்த கட்டுரையை தயார் செய்திருந்தேன். அதனை உங்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன். வேறு ஏதேனும் யுத்திகளை பின்பற்ற முடியும் என்றால், தயவுகூர்ந்து,பின்னூட்டத்தில் தெரிவித்தால், எனக்கும், என்னைப் போன்ற வெளிநாட்டில் தமிழ் பயிற்றுவிக்கும் நண்பர்களுக்கும் உபயோகமாக இருக்கும். இங்கே நான் வெளியிட்டுள்ள படங்களைக் கொண்டு தான் பவர் பாயிண்ட் பிரசன்டேஷனை உருவாகியிருந்தேன்.

மத்திமப் பருவத்து மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்
-சொக்கன் பாலர் மலர் தமிழ்ப் பள்ளி ஹோல்ஸ்வொர்தி சிட்னி

அறிமுகம்

புலம்பெயர்ந்த நாடுகளில் வளரும் தமிழ் குழந்தைகள் பெரும்பாலும் தங்களின் மத்திமப் பருவத்தில் தமிழ் படிக்கும் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதுண்டு. ஆஸ்திரேலியாவில் இந்தப் பருவத்தில் தான்> அவர்கள் செலக்டிவ் (selective ) பாடசாலைகளுக்கான தேர்வை எதிர்கொள்வதற்காக> ஓராண்டோ அல்லது இரண்டாண்டுகளோ தமிழ் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொள்கிறார்கள்.  இந்தச் செய்கையால் அவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வம் வெகுவாகக் குறைகிறது. அத்தேர்வு முடிந்த பிறகு> பெற்றோர்களின் தூண்டுதலால் தமிழ் பள்ளிக்கு வந்தாலும் அவர்களால் முழுமையாக ஆர்வம் செலுத்த முடிவதில்லை. அவ்வாறு வரும் மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதற்கான கற்பிக்கும் வழி முறைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் கருவாகும். இந்த கட்டுரையில் நான் மற்றும் எனது சக ஆசிரியர்கள் வகுப்பில் கையாண்ட பல யுக்திகளைப்  பற்றியும் அவற்றைப் பயன்படுத்தி மாணவர்களின் சிந்தனைத் திறன்> எழுத்துத் திறன்> பேச்சுத்  திறன்> உற்றுக்கேட்டு பதில் அளிக்கும் திறன்> வாசித்து பதில் அளிக்கும் திறன் மற்றும் குழுத்திறன் போன்ற திறன்களை எவ்வாறு  மேம்படுத்த இயலும் என்பதைப் பற்றியும் விரிவாகக் காணலாம். 


கணினி வழிப்பாடம்


1. வீட்டுப்பாடம்

இப்பொழுதெல்லாம் பொதுப் பாடசாலைகளில்> மாணவர்கள் பெரும்பாலும் வீட்டுப் பாடங்களை பேனாவைக்கொண்டு எழுதாமல்> கணினியில் தட்டச்சு மூலமாகத்தான் செய்கிறார்கள். அதனால் தமிழ் பள்ளியிலும் கணினி மூலமாக வீட்டுப்பாடங்களை செய்ய வைக்கலாம். ஐம்பது சதவீத வீட்டுப்பாடங்களை பேனாவைக்கொண்டும் மீதி ஐம்பது சதவீதத்தை கணினி வழியில் செய்யச் சொல்வதால்அவர்களுக்கு கணினியைப் பயன்படுத்தி தமிழை தட்டச்சு செய்யும் முறையை  அறிந்து கொள்ள முடியும். தட்டச்சு மூலம் செய்யப்பட்ட வீட்டுப்பாடங்களை ஆசிரியரின் மின்னஞ்சலுக்கு மாணவர்கள் அனுப்புவதால் ஆசிரியர்களுக்கு அதனை திருத்தும் வேலை எளிதாகி விடுகிறது. இதற்கு முதலில் அவர்களுக்கு கணினியைப் பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்வதை கற்றுக்கொடுக்க வேண்டும்(1)

2. ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தல்

ஆஸ்திரேலியாவில் நிறைய தமிழ் சமூக அமைப்புகள் ஒவ்வொரு வருடமும் ஏதாவதொரு மாநாட்டை நடத்தி>அதில் வெளியிடப்படும் மாநாட்டு மலர்களில் மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். அந்த கட்டுரைகளை சமர்பிக்க மாணவர்களை தயார் செய்து>அவர்களின் கட்டுரைகளை அந்த மாநாட்டு மலரில் வெளிவருவதற்கு ஏற்பாடு செய்யலாம். இவ்வாறு செய்வதால் அவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல்> வருங்காலத்தில் அவர்களுக்கு இந்த அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடைபெற்ற ஒரு மாநாட்டில் எங்கள் பள்ளியிலிருந்து ஆறு மாணவ மாணவியரின் கட்டுரைகள் வெளிவந்தன(2)
இவ்விரண்டு முறைகள் மூலமாக மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தைக் அதிகரிப்பதோடு அவர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்தவும்; முடியும்.

3. தாயகச் செய்திகளை அறிந்து கொள்ளுதல்   

மாணவர்களை வாரத்திற்கு அரை மணி நேரம் கணினியில் தமிழ்ப்; பத்திரிக்கைகளை படித்து தாயகச் செய்திகளில் மிக முக்கிய தலைப்புச் செய்திகளை அறிந்து கொள்ளச் செய்து> அந்த செய்திகளை வகுப்பில் பேசும் நேரத்தில் (speaking time) இரண்டு மணித்துளிகள் பேசச் செய்தல். இதன் மூலம் அவர்களின் படிக்கும் திறனையும்>பேசும் திறனையும் உயர்த்த முடியும். மேலும் அவர்கள் தாயகத்தில் நடக்கும் விஷயங்களையும் அறிந்து கொள்வார்கள்.

4. விடுமுறையில் தமிழ் படிப்பு

பள்ளி விடுமுறைகளில் மாணவர்கள் புத்தகத்தை எடுத்து தமிழ் படிப்பது அபூர்வம்.அதே சமயம் கணினி மூலமாகத் தமிழ் படிக்கச் சொன்னால் அவர்கள் ஆர்வத்தோடு படிப்பார்கள். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (3) அமெரிக்காவில் இருந்து இயங்கும் தமிழ் கற்றுக்கொடுக்கும் இணையத்தளம் (4), (5)

இதில் ஏதாவதொரு ஒரு இணையத்தளத்தில் ஒரு பகுதியை வீட்டுப்பாடமாக விடுமுறை நாட்களில் படித்து வரச் செய்யலாம்.
வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு மாணவர்கள் வரை உள்ள குழுவாகப் பிரித்து ஏதாவதொரு திட்டப்பணியை விடுமுறையில் குழுவாக செய்து வருமாறு சொல்லலாம்.
நான் என்னுடைய வகுப்பில் இம்மாதிரி குழுக்கள்; அமைத்து அவர்களுக்கு இந்தியாவில் ஆறு முக்கிய சுற்றுலாத் தளங்களைப் பற்றி அதாவது சென்னையிலிருந்து எவ்வாறு செல்லலாம்> தங்கும் வசதி> அங்கு முக்கியமாகப் பார்க்கக்கூடியவைகள்> எந்த மாதத்தில் செல்லலாம்> அந்த இடத்தின் வரலாறு என்று விரிவாக எழுதி> அதனை பவர்பாயிண்ட்டில் படைக்கச் சொல்லியிருந்தேன். மாணவர்களும் ஆர்வமாக பங்குக்கொண்டு படைத்தார்கள்.

மற்றுமொரு திட்டப்பணியாக மாணவர்களிடம் ஏதாவதொரு தலைப்பில் உதாரணமாக தங்களின் பெற்றோர்கள் தாயகத்தில் எவ்வாறு பள்ளிப் படிப்பை படித்தார்கள் என்பதைப் பற்றி பேட்டி  எடுத்து அதனை ஒரு கட்டுரையாக எழுதிக்கொண்டு வரச் சொல்லலாம்.
இவ்வாறு விடுமுறையில் அவர்களை தமிழ் படிக்கச் செய்வதோடு அவர்களின் குழுத்திறனையும் திட்டப்பணிகளை படைக்கும் திறனையும் அதிகரிக்க முடியும்.


வகுப்பறையில் பின்பற்றப்படும் யுக்திகள்



மத்திம பருவத்தில் மாணவர்களின் தொடர்ச்சியாக தமிழ் பள்ளிக்கு வருவதற்கும்தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் வகுப்பறையில் கையாளப்படும் புதிய முறைகள் பெரும் பங்கு வகிக்கிறது. என்னுடைய வகுப்பில் நான் கையாண்ட சில யுத்திகளை இங்கு பார்க்கலாம்.

1. பட்டிமன்றம்



பொதுவாக இந்த வயது மாணவர்களுக்கு தாங்கள் கூறும் கருத்துக்கள் தான் சரியாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். பெற்றோர்களோ நண்பர்களோ மாற்றுக் கருத்து கூறினால் அவற்றை எதிர்த்து தங்களின் கருத்துக்கு பலம் சேர்க்கும் விதமாக பதிலுரைப்பார்கள். இந்த எண்ணத்தை உபயோகித்து அவர்களின் பேச்சுத் திறனை அதிகரிக்க வகுப்பில் பட்டிமன்றம் நடத்தலாம். என்னுடைய வகுப்பில் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு வகுப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்திவிடுவேன். எந்தெந்த மாணவர்கள் எந்தத் தலைப்பில் பேச வேண்டும் என்பதையும் அவர்களிலிருந்து ஒரு தலைவரையும் தேர்ந்தெடுத்து அவர்கள் தயார் செய்வதற்கு இரு வாரங்களும் அளித்துவிடுவேன்.

இந்த யுக்தி மூலம் அவர்களின் சிந்தனைத் திறன்> குழுத்திறன் மற்றும் பேச்சுத் திறன் ஆகியவைகளை மேம்படுத்த முடியும்.

2. மாணவர்களே பாடங்களுக்குப் பயிற்சியைத் தயாரித்தல்

வகுப்பில் பாடங்களை நடத்தி முடித்த பிறகு அந்த பாடத்திற்கான பயிற்சியை மாணவர்களையே தயாரிக்க சொல்லுதல். அவர்களும் ஆர்வமாக தங்களின் சிந்தனைத் திறனை உபயோகித்து கேள்விகளைத் தயாரிப்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆறாம் வகுப்பை எடுத்தபொழுது> பாடப்புத்தகம் தான் இருந்தது> பயிற்சி புத்தகம் வெளியிடப்படவில்லை . அதனால் நான் பாடத்தை எடுத்து முடித்த பிறகு> வீட்டுப்பாடமாக மாணவர்களை அந்த பாடத்திலிருந்து கேள்விகளையும் அதற்கான பதில்களையும் எழுதிக்கொண்டு வரச்சொல்லி, கேள்விகளை தயாரிப்பதற்கும் சில விதிமுறைகளை கூறினேன். உதாரணத்திற்கு ஒரு கேள்விக்கான விடை ஒரு வரியிலும் மற்றொரு கேள்விக்கான விடை குறைந்தது இரு வரிகளிலும் மற்றுமொரு கேள்வி ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். ஒவ்வொருவரும் தாம் எழுதிக்கொண்டு வரும் கேள்விகளை பலகையில் எழுதச் சொல்லி மற்றவர்களை அந்த கேள்விகளையும் அதற்கான பதில்களையும் வகுப்பில் எழுதினார்கள் இவ்வாறு செய்ததால் அந்த பாடத்தைப் பற்றிய முழுமையான விளக்கத்தை  அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. இப்பொழுது பயிற்சி புத்தகங்கள் இருந்தாலும் இந்த யுக்தியை வகுப்பில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

3. உற்றுக் கேட்டு பதில் அளிக்கும் பயிற்சி


மேல்நிலை வகுப்பில் இருக்கும் ஒரு தேர்வானது உற்றுக் கேட்டு பதில் அளிக்கும் தேர்வாகும் (listening and responding). இதற்கான பயிற்சியை தொடங்கும் முன்> அன்றைக்கு எடுக்கப்பட பாடத்திலிருந்து ஒரு பத்தியை ஆசிரியர் ஒரு நிமிடத்துக்கு வாசிக்க வேண்டும். மாணவர்கள் அந்த ஒரு நிமிடமும் கவனமாக கேட்க வேண்டும். ஒரு நிமிடம் முடிந்தவுடன் அவர்கள் அடுத்த ஒரு நிமிடத்திற்கு தாங்கள் கேட்ட சொற்களை எழுத வேண்டும். இப்படி சில வாரங்கள் பயிற்சி அளித்து விட்டு பிறகு தெரியாத பாடத்திலிருந்து இந்த பயிற்சியை மேலும் சில வாரங்களுக்கு தொடர வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்களுக்கு உற்றுக் கேட்டு பதில் அளிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும். பிறகு மேல்நிலை வகுப்புகளில் நடக்கும் இந்த தேர்வு மாதிரி அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.

4. ஒரு நிமிட தேர்வு



வகுப்பில் அடிக்கடி ஒரு நிமிட தேர்வை நடத்தினால்> மாணவர்களும் தேர்வா! என்று யோசிக்கமாட்டார்கள். மேலும் ஆசிரியருக்கு மாணவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கும் எளிதாக இருக்கும். அதாவது வகுப்பின் இடையே தெரிந்த பாடத்தையும் பிறகு தெரியாத பாடத்தையும் ஒரு நிமிடம் அனைவரையும் வாசிக்கச் சொல்ல வேண்டும். அந்த ஒரு நிமிடத்தில் அவர்கள் எத்தனை வார்த்தைகளை படித்தார்கள் என்று அவர்களையே எண்ணிப்பார்க்கச் செய்து குறித்துக்கொள்ளச் சொல்ல வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வாரமுமோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ செய்தால் மாணவர்களின் வாசிக்கும் திறனை எளிதாக அறிந்து கொள்ள முடியும். மேலும் அவர்களுக்கு இது ஒரு தேர்வு என்ற எண்ணம் தோன்றாது. இதில் மற்றுமொரு விஷயத்தையும் ஆசிரியர் தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு மாணவனையும் வரிசையாக வாசிக்கச் சொல்லாமல், மாற்றி மாற்றி வாசிக்கச் சொன்னால்>  மாணவர்கள் வகுப்பை உன்னிப்பாக கவனிக்கிறார்களா என்று கண்டு பிடித்து விடமுடியும். இதே போல் எழுத்துத் தேர்வை நடத்தினால், ஒரு நிமிடத்தில் அவர்களால் எத்தனை வார்த்தைகள் எழுத முடிகிறது என்றும் அறிந்து கொள்ள முடியும்.


5. பேச்சுப் பயிற்சி


பொதுவாக இந்த வயது மாணவர்கள் அதிகம் தமிழில் பேசமாட்டார்கள். எங்கே நாம் தவறாக பேசிவிடுவோமோ என்ற பய உணர்ச்சி அவர்களிடம் அதிகமாக இருக்கும். அந்த பய உணர்ச்சியைப் போக்கி> அவர்களை சரளமாக தமிழில் பேச வைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வார கால அவகாசமாளித்து அவர்களுக்கு பிடித்த தலைப்பில் மூன்று மணித்துளிகள் முதல் ஐந்து மணித்துளிகள் வரை அவர்களை பேசr; சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு அவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படத்திற்கான விமர்சனம்> மிகவும் பிடித்த நடிக நடிகையர்> மிகவும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்ற தலைப்புகளில் பேச வைக்கலாம்.

6. புதிர் விளையாட்டுக்கள்

வகுப்பில் மாணவர்களை மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடச் செய்வதே இந்த புதிர் விளையாட்டுக்கள் தான். ஒவ்வொரு வகுப்பிலும் கடைசி பத்து அல்லது பதினைந்து மணித்துளிகள் இதற்காக ஒதுக்கினால் மாணவர்கள் ஆர்வத்தோடு ஒவ்வொரு வாரமும் பள்ளிக்கு வருவார்கள். குழுக்களாக பிரித்து இந்த விளையாட்டை விளையாடுவதால் மாணவர்களின் குழுத்திறனை மேம்படுத்த முடியும்.

     சொல்வளத்தை அதிகப்படுத்துதல்

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குழுக்களைப் பிரித்து சொல்வளத்தை அதிகப்படுத்தும் விளையாட்டை விளையாடுதல். அதாவது வீடு என்று சொன்னவுடன் உங்களுக்குத் தெரிந்த சொற்களை இரண்டு நிமிடத்திற்குள் எழுதுங்கள் என்று சொல்ல வேண்டும். அந்த அந்த குழு எழுதிய சொற்களின் எண்ணிக்கையை புள்ளிகளாக கணக்கிட்டுக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி காய்கறிகள்> குடும்பம் என்று கூறி இறுதியாக அதிக புள்ளிகளைப் பெற்ற குழு வெற்றிப்பெற்றதாக அறிவிக்கலாம்.

     தனித்தனியாக உள்ள சொற்களை வாக்கியமாக அமைத்தல்

     இரண்டு அல்லது மூன்று திருக்குறளை தாளில் எழுதி ஒவ்வொரு சொல்லாக வெட்டி எல்லாவற்றையும் ஒரு கவரில் போட்டு  ஒவ்வொரு குழுவிடமும் தந்து திருக்குறளை கண்டுப்பிடிக்கச் செய்வது. திருக்குறள் என்று தான் இல்லை வேறு ஏதாவது நீள வாக்கியங்களையும் இவ்வாறு செய்யலாம்.  

முடிவுரை

மேற்குறிப்பிட்டுள்ள யுக்திகளைப் பயன்படுத்திக் கற்பிப்பதால் மத்திம பருவத்து மாணவர்களுக்கு தமிழின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இவற்றில் சில யுக்திகள் மேல்நிலை வகுப்புக்கான பயிற்சியாகவும் விளங்குகிறது. இக்கட்டுரையானது தமிழ் தெரியாத இளைஞர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.


சான்றுக் குறிப்புகள் / References
3.      http://tamilvu.org/

  



Friday, January 23, 2015

காதல் - மௌனம் பேசியதோ!

மௌனம் பேசியதோ!



மற்றவர்களுக்கு நீ
மௌனமாக இருப்பது
தான் தெரியும் ஆனால்
விழிகளால் பேசிக்
கொண்டிருப்பது எனக்கு
மட்டும் தான் தெரியும்



கடல் தேவதை




நீ கடற்கரையில்
காலை நனைத்தபோது
கடல் நீர் எல்லாம்
தங்கள் தேவதைக்கு
பாதாபிஷேகம் செய்து விட்டோம்
என்ற சந்தோஷத்தில்
அலைகளை எழுப்பி
ஆர்ப்பரித்தன.




Wednesday, January 21, 2015

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவபூசை

சென்ற பதிவான “பொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க” என்கிற இந்த பதிவு டாஷ்போர்ட்டில் வராத காரணதத்தால், சிலர் அதை படிக்காமல் விட்டுப்போயிருக்கலாம். அவர்கள் படிப்பதற்காக அந்த பதிவின் சுட்டியை கீழே கொடுக்கிறேன் .

பொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க–குழந்தைகளின் ஒரு கலந்துரையாடல்





சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை









பதினோராம் அதிகாரம் - சிவபூசை.

ஐயா அவர்கள் நடோறும் வைகறைக் காலத்தில் எழுந்து சிவத்தியான முதலியன முடித்துக்கொண்டு, தடாக முதலியவற்றிற்குப்போய் தந்த சுத்தி முதலியவை முடித்துக்கொண்டு, ஆசார ஸ்நாநஞ் செய்து மடிதரித்து வீபூதி உத்தூளனம் திரிபுண்டந் தரித்து அனுட்டானம் முடித்துக்கொண்டு உருத்திராஷ மாலையணிந்து ஸ்ரீபஞ்சாட்சரஞ் ஜெபித்து, பத்திர புஷ்பம் திருமஞ்சனம் முதலிய பூகோபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, பார்த்திப ரூப சிவலிங்கம் பாணித்துக்கொண்டு, சிவாகம முறைப்படி சூரியபூசை துவாரபூசை செய்து பூத சுத்தி அந்தர் யாகம், ஆத்மசுத்தி மந்திரசுத்தி, ஸ்தான சுத்தி, திரவியசுத்தி, லிங்கசுத்தி என்னும் பஞ்ச சுத்திகளுஞ் செய்து ஆதார சத்தியாதி, சத்தி பரியந்தம் ஆசனங் கற்பித்து, மூர்த்தி நிவேசனஞ் தண்டபங்கி முண்டபங்கி, வத்திரபங்கி கலாபங்கி, முதலிய நியாசங்கள் செய்து, வித்தியாதேகம் பாவித்து ஆவாகனாதி பத்துச்சம்ஸ்காரங்களுஞ் செய்து திருமஞ்சன மாட்டி திருவொற்றாடை சாத்தி, பட்டாடை திருநீறு சந்தனக் குழம்பு திருவாபரணம் புஷ்பம் முதலியன சாத்தி, பாத்தியாசமன அர்க்கியங் கொடுத்து அர்ச்சனை செய்து, லயான்க போகாங்க பூசை செய்து புஷ்பாஞ்சலி செய்து நிவேதன முதலியன் செய்து தூபதீப கற்பூராராத்திரிகம் காட்டி, அர்ச்சனை செய்து புஷ்பம் சாத்தி, ஜெபம் ஜெபகர்ம நிவேதனம் ஆத்ம நிவேதனம் தோத்திரம் முதலியன செய்து, பிராத்தித்துப் பூசை செய்வார்கள். அவர்கள் பிராத்திக்கும்போது சிவநாமம் பல சொல்லி ஆரமையோடும், “சுவாமி! சைவ சமய வுண்மைகளும் தேவாராதி திருமுறைகளும் சித்தாந்த சாஸ்திர படனங்களும் அபிவிருத்தியாக வேண்டும். இவைகளே அடியேனுக்கு வேண்டுவன என்று விண்ணப்பித்து ஸ்தோத்திர முதலியவை செய்து சண்டேஸ்வர வழிபாடுடன் பூசை முடிப்பார்கள்.

இப்படிக் கிரியா காண்ட விதிப்படி பூசை செய்து வந்த ஐயா அவர்கள், சூரியனார் கோயில் ஆதீனம் குருமூர்த்திகளுடன் கலந்து வந்தபின் வாதுளாகம ஞான பூசா விதிப்படலத்திற் கூறியபடி ஞான பூசையாக ஆன்மார்த்த பூசை செய்து வந்தார்கள்.

இவ்வாறு பூசை செய்யும்போதும் ஜெபஞ் செய்யும்போதும் தோத்திரஞ் செய்யும்போதும் பார்த்தால், ஸ்ரீ அப்பமூர்த்திகள் போல் சிவா வேப் பொலிவுடன் இருக்கின்ற அழகும், நிர்மலாந்தக் கரணராய் விலங்குகின்ற காட்சியும்; ததும்பிப் பொழிந்து கொண்டிருக்கின்ற ஆனந்த பாஷ்பமும், அன்புமயமான சிவானந்தப் பெருஞ் செல்வராக விலங்குகின்ற தோற்றமும்; பார்க்கின்றவர்களுக்கு மனம் உருகி அன்போடு ஆனந்த வெள்ளம் உண்டாகாமலிராது.

நாடோறும் திருநீற்றுப்பதிகம், திருநெடுங்களப் பதிகம், திருநீலகண்டப் பதிகம், திருவதிகையிற்  சூலை நோய் தீர்த்தருளிய திருப்பதிகங்களும், கார்த்திகை நட்சத்திரந்தோறும் “கந்தர் கலி வெண்பா  “கந்தருனுபூதி கந்த ரலங்காரமும் பாராயணஞ் செய்து வருவது வழக்கம்.

பதினோராம் அதிகாரம் முற்றுப்பெற்றது.


பன்னிரெண்டாம் அதிகாரம் – நிரதிசயானந்தப் பெரும்பேறு