Tuesday, November 19, 2013

இந்த காலத்து குழந்தைகள்


இந்த காலத்துல பிறக்கிற குழந்தைகள் எல்லாம் ஐ-போன், ஐ-பேட், டேப்லேட் போன்றவைகளை பற்றி அம்மாவின் கருவறைக்குள்ளேயே கரைத்துக் குடித்து விட்டு தான் வெளியே வருகிறார்கள் போல. அந்த அளவுக்கு அவர்களின் அறிவு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் ஒன்றரை வயது குழந்தை, அவருடைய ஐ-போனை ஆண் பண்ணி, பிறகு அன்-லாக் பண்ணி, ஒரு விரலால் தட்டிக்கொண்டு இருக்கும். இன்னொரு நண்பரின் மூன்று வயது குழந்தை, ஐ-போனில் இருக்கும் விளையாட்டை தானாகவே திறந்து விளையாடும். இவர்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருக்கும். எப்படி இவர்களுக்கு இந்த வயதிலேயே இவ்வளவு அறிவு திறன் இருக்கிறது. இவர்களின் இந்த அபிரிதமான அறிவு வளர்ச்சி எப்படி வருகிறது என்று யோசிக்க தோணும். இவர்களின் இந்த வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோர்களாகிய நாம் பதில் சொல்லி மாள முடியாது. அதிலும் அவர்கள் கேட்கும் தர்மசங்கடமான 'அடல்ட் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என்பது நம்முடைய திறமைக்கு சவால் விடும் காரியமாகும். இவர்கள் கேட்கும் இந்த 'அடல்ட் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது என்பது பற்றி ஒரு வார இதழில் வெளி வந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது.அந்த கட்டுரையில், குழந்தைகள் மன நல மருத்துவர் அந்த மாதிரியான கேள்விகளை மிக அழகாக கையாளலாம் என்று கூறியிருக்கிறார். அதனை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். கண்டிப்பாக இது இளம் பெற்றோர்களுக்கு நன்மையாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருடைய பதில்களை படியுங்கள்.

''ஃபர்ஸ்ட் நைட்னா என்னம்மா?'' -குழந்தையின் இந்தக் கேள்விக்கு, 'கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வர்ற முதல் நைட்தான், ஃபர்ஸ்ட் நைட்என்ற சிம்பிளான ஒரு பதில் போதும். சில குழந்தைகள் விடாமல், 'அப்ப என்னம்மா செய்வாங்க?’ என்று கேட்பார்கள். 'அங்கிளும் ஆன்டியும் அதுக்கு முன்ன நேர்ல பேசியிருக்க மாட்டாங்க. அன்னிக்குதான் நிறைய பேசுவாங்க, அவங்களோட லைஃப் பத்தி பிளான் பண்ணுவாங்கஎன்று வயதுக்கு ஏற்றமாதிரி விளக்கம் சொல்லலாம்.

அதேபோல, 'காதல்னா என்ன..?’என்று கேட்டால், 'உனக்கு சாக்லேட், டாய்ஸ் பிடிக்கும்ல. அதேபோல ஒரு அங்கிளுக்கு ஒரு ஆன்டியை பிடிச்சா, அல்லது ஆன்டிக்கு அங்கிளை பிடிச்சா... அது காதல், அன்பு, பிரியம்!’னு சொல்லலாம். இந்தக் கேள்வியை 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கேட்டா, 'ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீது 25 வயதுக்கு அப்புறம் வர்றதுதான் உண்மையான காதல்!’னு அடிக்கோடிட்டு சொல்லலாம்.

'குழந்தை எப்படிம்மா பொறக்குது?’ - இது அடுத்த கேள்வி. 'கல்யாணம் ஆனவுடனே, அந்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கடவுள் குழந்தை கொடுப்பார். அந்தக் குழந்தை 10 மாசமா அம்மா வயித்துக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா வளரும். அப்புறம் அது பெருசாயிடும், இடம் பத்தாதுல... வயித்துல இருந்து வெளிய வந்துடும்!’ என்று சொல்லுங்கள்.

'எய்ட்ஸ்னா என்னம்மா..?’ என்று கேட்டால், 'ஹெச்..வி-னு ஒரு கிருமியால ஏற்படற நோய். நாம சுத்த பத்தமா இல்லாம இருந்தா, எய்ட்ஸ் நோய் வரும்!’ என்ற அடிப்படை விளக்கம் 10 வயதுவரை போதுமானது.
டி.வி-யில் பார்க்கும் பார் காட்சிகள், பக்கத்து வீட்டுக்காரர் அல்லது உறவுக்காரர் குடித்துவிட்டு சலம்புவதைப் பார்த்து குழந்தைகள் கேள்வி கேட்டால், 'அது கெட்ட தண்ணி. அதைக் குடிச்சா, கெட்ட சந்தோஷம்தான் கிடைக்கும். ஹெல்த் எல்லாம் கெட்டுப்போயிடும். அதனால அதை எப்பவுமே குடிக்கக் கூடாது!’ என்று சொல்லிக் கொடுங்கள்'' என்றார்.

''பொதுவாக குழந்தைகள் தங்கள் பெற்றோர் மற்றும் டீச்சரிடம்தான் முதலில் தங்கள் கேள்விகளை கட்டவிழ்த்துவிடுவார்கள். அதற்கு அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக பதில் சொன்னால்தான், தங்களின் உலகத்தை தொடர்ந்து அவர்கள் உங்களிடம் பகிரப் பழகுவார்கள். ஒருவேளை தங்களுக்குப் பதில் கிடைக்காமல் போனாலோ, பதிலுக்குப் பதிலாக பெற்றோர் டென்ஷன் ஆனாலோ, பக்கத்து வீட்டு அங்கிள், ஆன்டி, டிரைவர் என்று பதில் தேட ஆரம்பிப்பார்கள்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மலிந்து கிடக்கும் இந்தக் காலத்தில், 'ஃபர்ஸ்ட் நைட்னா என்ன அங்கிள்?’ என்று ஏழு வயதுப் பெண் குழந்தை வீட்டு டிரைவரிடம் கேட்பதில் உள்ள விபரீதத்தைப் புரிந்துகொண்டு, குழந்தைகளின் கேள்விகள் எப்போதும் பெற்றோரை நோக்கியே மடை திறக்கும் சூழலை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்'' என்ற டாக்டர், ''சில குழந்தைகள் ஃப்ரெண்ட்ஸ், பக்கத்து வீடு என்று வெளிப்பழக்கத்தில் சிலசமயம் கெட்ட வார்த்தை கற்று வந்து வீட்டில் பேசுவார்கள். அதைக் கேட்டவுடன் குழந்தையைத் திட்டுவதோ, அடிப்பதோ வேண்டாம். அது பண்பற்ற வார்த்தை என்பதையும், அவ்வாறான வார்த்தைகளைப் பேசுபவர்களை மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடும் என்றும் விளக்கமாகச் சொல்லுங்கள். மேலும் குழந்தை யாரிடமிருந்து அந்த வார்த்தையை கற்றுக்கொள்கிறதோ, அவர்களிடம் குழந்தை முன் அதுபோன்ற வார்த்தைகளைப் பேச வேண்டாம் என்று சொல்வதுடன், அவர்களின் பழக்கத்தையும் தவிருங்கள். சக குழந்தைதான் உங்கள் குழந்தைக்கு அந்த வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்கிறது என்றால், அதன் பெற்றோரிடம் முறையிடுங்கள். தங்கள் பிள்ளை பற்றி சொல்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றாலும், சொல்வது உங்கள் கடமை'' என்றார் அழுத்தமாக.

தொடர்ந்தவர், ''அதேபோல ஐந்து வயதுக்குள்ளேயே குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் போன்றவற்றைக் கற்றுத் தர வேண்டும். 13 - 19 வயதிலான காலகட்டம், குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ரொம்பவே சிக்கலான காலகட்டம். இந்த வருடங்களில் குழந்தைகள், பெற்றோர்கள் எது சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அது வயதின் கோளாறு. அதைப் புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் கோபப்பட்டு பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்காமல் போகும்படி நடந்து கொள்ளக்கூடாது. அவர்களின் ஹார்மோன் கோபங்களைப் பொருட் படுத்தாமல், அன்பை மட்டுமே தொடர்ந்து தந்து கொண்டிருக்க வேண்டும்'' என்று அழகாக முடித்தார் அந்த மன நல மருத்துவர்.

உண்மையில் இந்த கட்டுரையை படிக்கும்போது, குழந்தைகளின் கேள்விகளுக்கு நாம் எவ்வளவு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு நேரமாவது, நாம் நம் குழந்தைகளோடு சேர்ந்து உணவு உண்ண வேண்டும். அது பெரும்பாலும் இரவு உணவாக தான் அமையும். அப்படி நாம் நம் குடும்பத்தாரோடு சேர்ந்து உணவு உண்ணும்போது, அன்றைக்கு நடந்த நிகழ்ச்சிகளை நாம் பகிர்ந்து கொண்டால், குழந்தைகளும், அவர்களுக்கு நடந்த நிகழ்ச்சிகளை நம்மிடம் மறைக்காமல் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி பகிர்ந்துக் கொள்ளுவதால் நாம் தான் அவர்களுக்கு உற்ற நண்பர்களாக அதாவது “Best Friend” ஆக இருப்போம். என் தாய் அடிக்கடி சொல்லுவார்கள், ஒரு குழந்தைக்கு உண்மையான ரோல்மாடல் அந்த குழந்தையின் பெற்றோர் தான் என்று. அதனால் தான், பெற்றோர்களாகிய நாம் சரியாக நடந்து கொண்டால், குழந்தைகளும் நல்ல குழந்தைகளாக வளருவார்கள்.


“எல்லா குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே”.  

8 comments:

  1. அனைத்து பெற்றோர்களும் அறிந்து கொள்ள வேண்டியவை...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

      Delete
  2. நல்லதொரு பதிவு...... பேஸ்புக் நண்பர் மூலமாக தெரிந்து கொண்டேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

      Delete
  3. நல்லஒரு பதிவு. அருமையான விளக்கங்கள்....இன்று நீங்கள் தளிர் வலையில் சொல்லியிருந்ததை வைத்து இங்கு வந்தோம்.....

    ReplyDelete
  4. //குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மலிந்து கிடக்கும் இந்தக் காலத்தில், 'ஃபர்ஸ்ட் நைட்’னா என்ன அங்கிள்?’ என்று ஏழு வயதுப் பெண் குழந்தை வீட்டு டிரைவரிடம் கேட்பதில் உள்ள விபரீதத்தைப் புரிந்துகொண்டு, குழந்தைகளின் கேள்விகள் எப்போதும் பெற்றோரை நோக்கியே//

    உண்மை. அருமையான பகிர்வு நண்பரே.

    ReplyDelete