Tuesday, March 27, 2012

பத்திரிக்கையில் புகைப்படம்

பத்து நாளைக்கு முன்னாடி எங்க ஊர்ல திருவிழா நடந்துச்சு. “இங்கில்பர்ன் திருவிழான்னு” அதுக்கு பேர். காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை, அந்த திருவிழா நடக்கும். இதுக்கு முன்னாடி இந்த திருவிழாவை பார்க்காததுனால, நானும் கரகாட்டம் எல்லாம் இருக்கும்னு நினைச்சு, எங்க வீட்டு அம்மணியையும், மகாராணிகளையும் கூட்டிக்கிட்டு போனேன். மழையும் அந்த திருவிழாவை பார்க்குறதுக்கு ஆசைப்பட்டிருக்கும் போல. அப்ப அப்ப தூறல் போட்டுக் கிட்டு இருந்துச்சு. அங்க போனா, நான் நினச்ச கரகாட்டம் எல்லாம் நடக்கலை. ஆனா அதுக்கு பதிலா ஒரு மேடைய போட்டு, அதுல சில பேரு காக்கா வலிப்பு வந்த மாதிரி ஏதோ பாட்டுக்கு ஆடிக்கிட்டு இருந்தாங்க. வீட்டு அம்மணிக்கிட்ட இதென்ன, கைய, காலை இழுத்துக்கிட்டு, வலிப்பு வந்த மாதிரி நடிக்கிறாங்களேன்னேன். அவ்வளவுதான் அவுங்களுக்கு வந்தே கோபம். இது நீங்க நினைக்கிற மாதிரி அவுங்களுக்கு வலிப்பு ஒண்ணும் வரலை. இது தான் மேற்கத்திய நடனம். இதுல ஒரு ஸ்டெப்பாவது உங்களால போட முடியுமான்னு சவால் விட்டாங்க. அவுங்க கோபத்தை பார்த்து பயந்து போயி அப்படியே சரண்டர் ஆயிட்டேன் (இதென்ன புதுசா...) அவுங்களுக்கு நடனத்து மேல அப்படி ஒரு ஈடுபாடு. அப்புறம் ஒவ்வொரு ஸ்டால்லேயும் நின்னு, நின்னு ஸ்டால் வச்சிருக்கவுங்க பேசுறதுக்கு எல்லாம் தலைய தலைய ஆட்டிக்கிட்டு, பராக்கு பார்த்துக்கிட்டே போனோம். அப்போ நண்பர்களை அங்கே பார்த்த போது, அவுங்க, என்ன! ஒட்டகச் சவாரி செய்யலையா, முதல்ல அங்க போங்கன்னு, எங்களை விரட்டி விடாத குறையா அங்க போகச் சொன்னாங்க. அதனால அந்த எடத்துக்கு போனோம். அங்க பார்த்தா வத்தலும் தொத்தலுமா ரெண்டு ஒட்டகத்தை முன்னும் பின்னுமா கட்டி வச்சு ஒரு தாத்தா இழுத்துக்கிட்டு இருந்தாரு. ஒரு ஒட்டகத்துல முன்னாடியும், பின்னாடியுமா ரெண்டு பேர் உட்காரலாம்.அந்த இடத்துல ஒரு பெரிய க்யூ வேற நின்னுக்கிட்டு இருந்துச்சு. அந்த ஜோதியில நாங்களும் ஐக்கியமானோம். பெரிய மகாராணி துணைக்கு அவுங்க அம்மாவை வேற கூட்டிக்கிட்டு ஒட்டகத்துல உட்கார்ந்துக்கிட்டாங்க. . நானோ, ஒண்ணும் தெரியாத அப்பாவியா, ஒரு கையில, ரெண்டாவது மகாரணியை தூக்கிக்கிட்டு, இன்னொரு கையில, அவுங்களோட nappy பையையும், போதாக்குறைக்கு, வீட்டு அம்மணியோட handbagயும் தூக்கிக் கிட்டு தேமேன்னு நின்னுக்கிட்டு இருந்தேன். இதுல, அவுங்க ரெண்டு பெரும் ஒட்டகச் சவாரி செய்யுறதை போட்டோ வேற எடுக்கணுமே, எப்படி எடுக்கலாம்னு நினைக்கும் போது, என்னைய மாதிரியே இன்னொரு நண்பர், அந்த பூங்காவுக்கே தோட்டக்காரன் மாதிரி நின்னுக்கிட்டு இருந்தாரு, அப்புறம் அவரே, என் நிலமைய பார்த்து (பரிதாபப் பட்டு), என் மொபைல் போன்லேருந்து போட்டோ எடுத்துக் கொடுத்தாரு. ஒரு வழியா அந்த ஒட்டகச் சவாரிய முடிச்சோம்.(முடிச்சாங்க). சரி, இதுக்கு மேல இங்க பார்க்குறதுக்கு ஒண்ணும் இல்லை, வீட்டுக்கு போலாம்னு தான் நினைச்சேன். அதுக்குள்ள எங்க அம்மணிக்கு, கொஞ்சம் தள்ளி ஒரு பெரியயயய!!! கூட்டம் நிக்கிறதை பார்த்துட்டாங்க. உடனே, ஏங்க, அங்க என்னமோ ரொம்ப ஸ்பெஷல்னு நினைக்கிறேன், அதனால தான் அவ்வளவு பெரிய கூட்டம் அங்க. வாங்க நாமளும் போலாம் அப்படின்னாங்க. அவுங்க பேச்சுக்கு மறு பேச்சு உண்டா!!!. நாங்களும் அங்க போயி, கடைசியா நின்னுக்கிட்டு இருந்தவரிடம், ஏங்க இவ்வளவு கூட்டம்னு கேட்டா, அதுக்கு அவரு, நம்மளை போட்டோ எடுத்து, லோக்கல் பேப்பர்ல போடுவாங்கலாம் அப்படின்னாரு, வீட்டு அம்மணிக்கு இதுல இஷ்டம் இருந்தாலும், கூட்டத்தைப் பார்த்து, வேண்டாங்க, நாம வீட்டுக்கே போகலாம்னு சொன்னாங்க. ஆனா நான் விடாம நம்ம போட்டோவும் பத்திரிக்கைல வரும்னு சொல்லி, அவுங்களை சம்மதிக்க வச்சு, அனுமார் வால் மாதிரி இருந்த கூட்டத்துல கடைசியா நின்னோம். கொஞ்ச நேரம் நின்ன பிறகு தான்,நாங்க கேட்ட அந்த புண்ணியவான், நீங்க முதல்ல போட்டோ எடுத்துக்கிட்டு வந்து இங்க நிக்கனும் அப்படின்னாரு. அட கடவுளே, இத முன்னாடியே சொல்லி தொலைக்க கூடாதான்னு, மனுசுகுள்ள அந்த ஆளை திட்டிக்கிட்டு, முன்னாடி போயி போட்டோ எடுக்கணும்னு சொன்னோம். அப்ப தான் எங்களுக்கு தெரிஞ்சது, நம்ம போட்டோவை எல்லாம் பத்திரிக்கைல போடமாட்டாங்கன்னு, ஆனா அதுக்கு பதிலா பேப்பர்ல வந்த மாதிரி போட்டோ எடுத்துக் குடுப்பாங்கன்னு தெரிஞ்சுது. சரி, பரவாயில்லை, நம்மளை சும்மா போட்டோ எடுத்துக் கொடுக்குறாங்க, அதை எதுக்கு விடுவானேன்னு, நாங்களும் போட்டோ எடுத்து, அதுல வேற ரெண்டு பிரதியை(2 copies ) வாங்கிக்கிட்டு வீடு வந்து சேர்ந்தோம். என்னடா, நம்ம போட்டோ பத்திரிக்கைல வரும்னு ஆசையா இருந்தா இப்படி ஆயிடுச்சேன்னு நினைச்சு வருத்தப்பட்ட போது தான், வீட்டு அம்மணி, உங்க வலைப்பூவுல இந்த படத்தை போடலாமேன்னு யோசனை சொன்னாங்க. அட இது கூட நல்ல யோசனை தான்னு அந்த புகைப்படத்தை, இந்த பதிவுல வெளியிட்டேன்.

4 comments:

  1. சொக்கரே, இப்படி ஏமாத்திப்பூட்டிங்களே! உண்மையிலே பேப்பர்ல வந்திருக்குன்னு சந்தோஷப்பட்டுப் படிச்சா சப்புன்னு போச்சு. அடுத்தமுறை வெற்றிபெற வாழ்த்துக்கள்.
    அன்பு

    ReplyDelete
  2. அன்பு சார்,
    பத்திரிக்கையில் வரும்னு நினைச்சு தான் நாங்களும் அந்த வரிசைல நின்னோம். கடைசில ஏமாந்துட்டோம். அடுத்த தடவையாவது நிறைவேறுமான்னுப் பார்ப்போம்.

    சொக்கன்

    ReplyDelete
  3. வித்தியாசமான திருவிழா..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. போட்டோவுல கூட நீங்க பின்னாடிதான் நிக்கிறீங்க ...

    ReplyDelete