Saturday, June 8, 2013

நான் படித்து ரசித்த சிரிப்புத் துணுக்குகள்

போன வருஷம் நான் பதித்த அந்த பதிவுல சொன்ன மாதிரி, 


பெண்கள் ரசிக்க கூடிய துணுக்குகளை இந்த பதிவில் பதியிறேன். 

பெண்களுக்கு பிடித்தவை:

கணவன்: உனக்கு WIFEக்கு அர்த்தம் தெரியுமா? Without Information, Fighting Everytime.

மனைவி: அது கிடையாதுங்க, With Idiot For Ever.


காதலன்: நாம இரண்டு பேரும் மோதிரம் மாத்திக்கலாம்னு சொன்னா வேண்டாங்கிறியே! ஏன்?

காதலி: உங்க மோதிரம் இரண்டு கிராம். என் மோதிரம் நாலு கிராம் அதான்.


கலா: என்ன சண்டை வந்தாலும் என் கணவர் சாப்பாட்டுல மட்டும் கோபத்தை காட்ட மாட்டாரு.

மாலா: நிஜமாவா?

கலா: ஆமாம். சமைச்சு வச்சுட்டுதான் போவாரு.


கணவன்: ஏண்டி என் பிராணன வாங்குற?

மனைவி: உங்ககிட்ட வாங்குறதுக்கு வேற என்ன இருக்கு.


கணவனும் மனைவியும் பல் டாக்டரிடம் சென்றார்கள்.
டாக்டர், அவசரமாக நான் போக வேண்டியிருப்பதால்,மயக்க மருந்தெல்லாம் கொடுத்துப் பல்லை பிடுங்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு சீக்கிரம் பிடுங்கிறீர்களோ,அவ்வளவுக்கு நல்லது. என்றாள் அந்த பெண்.

அவள் சொன்னதை கேட்டு, மிகவும் வியந்த டாக்டர்,
நீங்க உண்மையிலேயே தைரியசாலி தான், எந்த பல் என்றார்?

அன்பே!உங்கள் பல்லைக் காட்டுங்க, என்றாள் அவள் தன் கணவன் பக்கம் திரும்பி.


கணவன்: இது மாதிரி தொடர்ந்து என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தால், ஒரு நாள் நான் மிருகமா மாறிடுவேன். ஜாக்கிரதை.

மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்.

-
போனா போகுதுன்னு, ஆண்கள் ரசிக்கிறதுக்காக சில துணுக்குகள்.

ஆண்களுக்கு பிடித்தவை:

குரு: என்னங்க, உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக்கிட்டே இருக்குது?

கிரி: என் பொண்டாட்டி, என் மேல ஏதாவது பாத்திரத்தை தூக்கி வீசுவா, என் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன். ஒரே தமாசு தான் போங்க.


புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு போனான்.

கடைக்காரர்: சார்,உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

வந்தவன்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னைய பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க..


இரண்டு நண்பர்கள் பாரில்...

கண்ணா: சே! இந்த பெண்டாட்டிங்களை அடக்கவே முடியாது போல. நீ எப்படிடா?

குமார்: நேத்து, என் பொண்டாட்டியை முட்டி போட்டு நடக்க வச்சேன்.

கண்ணா: கேக்குறதுக்கே,ரொம்ப சந்தோஷமா இருக்கு. சொல்லு,சொல்லு அப்புறம்.

குமார்: அப்புறம் அவ சொன்னா.... “மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழே இருந்து வெளியே வந்து சண்ட போடுன்னு. 

1 comment: