Wednesday, March 11, 2015

நாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்




சில நாட்களுக்கு முன்பு, மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லியிருந்தார். அந்த கருத்தை ஆமோதித்து, நான்கு வருடங்களுக்கு முன்பு(2010) எங்கள் தமிழ் பள்ளி ஆண்டு விழாவில் நான் எழுதி மாணவர்களை நடிக்க வைத்த இந்த நாடகத்தை இங்கு பதிகிறேன். அந்த ஆண்டு விழாவில், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குனர் முனைவர் ப.அர.நக்கீரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு,தன்னுடைய உரையில்  இந்த நாடகத்தைப் பற்றி பெருமையாக பேசியது எனக்கு அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் இந்த நாடகம் தான் என்னுடைய முதல் சிறுவர் நாடகம். அந்த ஊக்கம் தான் என்னை மேலும் பல சிறுவர் நாடகங்களையும் சிறுவர் கலந்துரையாடல்களையும் எழுத வைத்தது. இந்த நாடகத்தில் நடித்த குழந்தைகளின் புகைப்படங்கள் என்னிடம் இல்லாததால்,அவர்களின் புகைப்படத்தை வெளியிடமுடியவில்லை. இன்னும் பள்ளி ஆண்டுவிழாவிலும்,சிட்னி சைவ மன்ற சேக்கிழார் விழாவிலும் மேடையேற்றிய மூன்று சிறுவர் நாடகங்களை புகைப்படங்களோடு விரைவில் இங்கு பதிகிறேன். 


                                    நாரதரின் சிட்னி விஜயம்

காட்சி 1:

இடம்: சிட்னி சிட்டி ஏரியா.

நாரதர்:  " நாராயணா ! " " நாராயணா ! " .

(இரண்டு மாணவிகள் அவரை பார்த்து பேசிக்கொண்டு வருகிறார்கள்)

மாணவி - 1 :  Look him ya!! Who is this guy? Looks like a comedian.

மாணவி - 2 :  I think he is acting in a drama. I will check.

(இரண்டாம் மாணவி நாரதரிடம் விசாரிக்கிறார்).

மாணவி - 2 :  Excuse me, you are looking different. What’s your name and where you are from? 

நாரதர்: (திரு திருன்னு முழித்துக்கொண்டு) , I, நாரதர்.

மாணவி - 2 : What  நாதா?

நாரதர்: (மனதிற்குள்), இது நல்ல இருக்கே, ஆமாம் நாதா தான் நாதா தான்.

மாணவி - 1 : Do you know English?

நாரதர்: I know small small English. ஆனா  I know very big tamil.

மாணவி - 1 :  Oh! Tamil. our origin is tamilnadu but we don’t know tamil.

மாணவி - 2 :  Are you too from tamilnadu??

நாரதர்: இல்லை, இல்லை, (ஐயையோ இவுங்களுக்கு தமிழே தெரியாதே
சரி BUTLER  இங்கிலீஷ்ல தான் பேசணும்) . No No , I I come from தேவலோகம்.

மாணவி - 1 :   Devalogam !!! Where is it? Is it in Antartica??

நாரதர்: நாராயணா! நாராயணா! . தேவலோகத்தைப் போய் அண்டார்டிகாவில்  இருக்கான்னு கேக்குதுங்கலே. ஞான சூன்யங்களா!!

மாணவி - 2 :  சூன்யங்களா? what is it?

நாரதர்: (என்னத்தை சொல்றது?)  ஒண்ணுமில்லை.

மாணவி - 2 :   Wait!  wait! . Now I  remember my grandma shows a picture like you and said that “Naradhar”.  Are you the same naradhar? But in that photo he wores dhoti and not phant.

நாரதர்: (சந்தோஷத்தில் குதிக்கிறார்). அப்பாடா. என்னைய
கண்டுப்பிடிசிட்டாங்க.  Yes , Yes . I Come to Sydney change to phant.

(இவங்ககிட்ட english கத்துக்க வேண்டியது தான்.) தயவு செய்து me teach English.

                 (இரண்டு பேரும் பேசிக்கொள்கிறார்கள்)

If we teach English, then we will forget our English and start speaking like him.

(அவர்கள் ஓடுகிறார்கள்)

நாரதர்: நாம் english கத்துக்கமுடியாது போலிருக்கே. சரி ஊரையாவது சுத்திப் பார்க்கலாம்.

காட்சி 2:

இடம்: liverpool ஏரியா.
(நாரதர் train ஏறி liverpool வருகிறார்)
(அப்போது 2 மாணவர்கள் englishல் பேசிக்கொண்டு போகிறார்கள்)

நாரதர்: என்னது இவுங்களை பார்த்தால் தமிழ் பிள்ளைகள் போல தெரிகிறார்கள், ஆனால் தமிழே தெரியாதா?

(அப்பொழுது ஒருவர் தமிழ் புத்தகத்தோடு வருகிறார். அங்கிருந்த மாணவர்கள் அவரைப் பார்த்து வணக்கம் சொல்கிறார்கள், அவரும் வணக்கம் கூறுகிறார்).

நாரதர்: வணக்கமா! ஐயா உங்களக்கு தமிழ் தெரியுமா? சரி சரி, தமிழ் புத்தகம் எல்லாம் வச்சிருக்கீங்களே.

தமிழ் பள்ளி முதல்வர்: தமிழ் நல்லா தெரியும். ஆமாம் நீங்கள் வேட்டி கட்டியிருந்தால் இந்த நாரதர் வேஷம் நல்லா இருந்திருக்கும்.

நாரதர்:  நான் நாரதரே தாங்க.

தமிழ் பள்ளி முதல்வர்: அப்போ இதென்ன வேஷம்? ஜீன்ஸ் phant எல்லாம் போட்டுக்கிட்டு.

நாரதர்: ஹி!!! ஹி! (அசடு வழிகிறார்).  வேட்டி தான் கட்டினேன். trainla வரும்போது வேட்டி மாட்டிக்கிச்சு. அதனால phantikku மாறிட்டேன்.

தமிழ் பள்ளி முதல்வர்: சரி சரி. அமாம் உங்கள் சிட்னி விஜயத்தின் நோக்கம் தான் என்ன?
நாரதர்: நான் என்னுடைய இங்கிலீஷ் திறமையை வளர்த்துக்கலாம் என்று இங்கு வந்தேன்.

(அப்போது 2 மாணவர்கள் தாங்கள் பார்த்த தமிழ் படத்தைப் பற்றி தமிழில் பேசிக்கொண்டு போகிறார்கள்)

நாரதர்: ஆஹா ! இங்கே தமிழ் படம் எல்லாம் வருமா? எந்திரன் கூட வந்துதா?

தமிழ் பள்ளி முதல்வர்: நீங்க வேற! இங்க நிறைய தமிழ் படம் எல்லாம் வரும். நான் கூட எந்திரன் படத்தை முதல் நாளே பார்த்தேன். இங்கு நிறைய தமிழ் நிகழ்சிகள் எல்லாம் நடக்கும். இங்கு பாலர் மலர் தமிழ் பள்ளிகளில் தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

நாரதர்: ! சிட்னியில் தமிழ் பள்ளி கூடம் எல்லாம் இருக்கிறதா?

தமிழ் பள்ளி முதல்வர்: ஆமாம் 5 பள்ளிகள் இருக்கிறது. நான் கூட அதில் ஒரு பள்ளியில் முதல்வராக இருக்கிறேன்வாங்களேன் தமிழ் பள்ளிக்கு போகலாம்

காட்சி 3: 

இடம்: Holsworthy தமிழ் பள்ளி
(5 மாணவிகள் சந்திக்கிறார்கள்)

மாணவி -1 : Hi, How are you?

மாணவி -2 : ஹே நீ என்ன தமிழில் பேச மாட்டியா?

மாணவி -1 : I don’t want to talk tamil.

மாணவி -3 : ஏன்? நம்முடைய FRENCH , GERMAN  நண்பர்கள் எல்லாம் அவர்களுடைய மொழியில் தானே பேசுகிறார்கள்பிறகு நாம் ஏன் தமிழில் பேசக்கூடாது?

மாணவி -1 : அவர்களுடைய அப்பா அம்மா அவுங்களோட இங்கிலிஷ்லேய பேச மாட்டர்கள். ஆனால் என்னோட அப்பாவும் அம்மாவும் தமிழ்லேய பேச மாட்டார்கள். அதனால் தான் எனக்கு தமிழில் பேச புடிக்கலை.

மாணவி 4: (சிரித்து) அது எல்லாம் அவுங்களோட ஆங்கிலத் திறமையை வளர்த்து கொள்ளத்தான் நம்மிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்

மாணவி 3 : நீ அவர்களுக்கு தமிழில் பதில் கூறு. இரண்டு பேரும் அவங்க அவங்க திறமைய வளத்துக்கலாம் தானே.

மாணவி -5 : எனக்கு தமிழ் வீட்டுப்பாடம் எல்லாம் என் பாட்டி தான் சொல்லிக்கொடுக்கிறார்கள்

மாணவி -2 : நமக்கு தமிழில் டெஸ்ட் வைக்கிற மாதிரி நம்மோட 
பெற்றோருக்கும் ஆத்திச்சுடி, திருக்குறளில் எல்லாம் டெஸ்ட் வைக்கணும்.

(எல்லோரும் சிரிக்கிறார்கள்)

மாணவி -1 : அவ்வளவுதான்! நிறைய பெற்றோர் பெயில் ஆக வேண்டியது தான். பிறகு அவர்களுக்குன்னு ஒரு தமிழ் பள்ளிக் கூடம் ஆரம்பிக்க வேண்டும்.

மாணவி 3 : சரி நாம வேற எதாவது பேசலாமா. 

மாணவி -4 : இந்தியன் படத்துக்கும் எந்திரன்  படத்துக்கும் என்ன வித்தியாசம் என்று யாருக்காவது   தெரியுமா?

(எல்லோரும் யோசிக்கிறார்கள்)

மாணவி -1 : இந்தியன்ல ஹீரோ வை தாத்தா வாக காட்டுவாங்க. எந்திரன்  தாத்தா வை ஹீரோ வாக காட்டுவாங்க.

(அப்போது ஒரு மாணவியின் அம்மா வருகிறார்)

அம்மா: இது தான் நீங்கள் தமிழ் படிக்கிற அழகா?

மாணவி -4 : தமிழ் படத்தை பார்த்தா தமிழ் ஈசியாக கத்துக்கலாம் அம்மா, சரி இன்னைக்கு ஒரு தமிழ் பட dvd வாங்கிட்டு வாங்க.
அம்மா : படத்தை பார்த்துட்டு சும்மா இருந்தா பரவால்லை. நேற்று என்ன சொன்ன! "நான் ஒரு வேலைய ஒரு தடவ செஞ்சா நூறு தடவ செஞ்ச மாதிரின்னு சொல்ற. அப்புறம் என்னடான்ன, உங்கப்பாகிட்ட ஒரு சேலை வாங்கிக்கொடுங்கன்னு கேட்டா, நீ நடுவுல பூந்து "அதிகமா ஆசைப் படுகிற பெண் நிம்மதியா வாழந்ததாக சரித்திரமே கிடையாதுன்னு" ஒரு பிட்ட போட்டே. உடனே உங்கப்பாவும், ஆஹா என் மகள் சொன்னா சரியாதான் இருக்கும்னு சொல்லி வாங்கித் தரலை. நீ இந்த மாதிரி பேசுனா நான் எப்படி தமிழ் பட dvd வாங்க முடியும்.

மாணவி -4 : இப்படி பேசுவது எல்லாம் என்னடோ தமிழ் திறமை வளர்பதற்குத் தான் அம்மா.


(அப்போது நாரதர் அவர்களிடம் வருகிறார்)

நாரதர்: நான் உள்ளே வரலாமா?

மாணவி -5 : அதான் உள்ளே வந்துட்டிங்களே. அப்புறம் என்ன கேள்வி உள்ளே வரலாமா என்று?

மாணவி -1 : நீங்கள் westmead கோவில் குருக்களா இல்ல helensburgh கோவில் குருக்களா?

நாரதர்: நான் தான் நாரதர். தேவலோகத்திலிருந்து வருகிறேன்.

(எல்லோரும் வணக்கம் கூறுகிறார்கள்)

நாரதர்: சிட்னியில் நீங்கள் தமிழ் பேசுவதை கேட்பதற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது.

சிறுவன் 1: நாரதரே நீங்கள் எங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறிங்களா?

சிறுவன் 2: ஆமாம் ஆமாம், நீங்களே எங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுங்க

(அப்போது தமிழ் தாய் அங்கு விஜயம் செய்கிறார்)

 தமிழ் தாய்: என்ன நாரதா உன் சிட்னி விஜயம் நன்றாக உள்ளதா?
(எல்லோரும் வணங்குகிறார்கள்)

நாரதர்: தமிழ் தாயே, இங்கே நம் தமிழ் பிள்ளைகள் எல்லாம் மிக அருமையாக தமிழ் பேசுகிறார்கள். மேலும் அவர்கள் என்னை இங்கு தமிழ் சொல்லிக் கொடுக்க சொல்கிறார்கள். அதனால் நான் இங்கு சில காலம் தமிழ் சொல்லிக் கொடுக்கப்போகிறேன்

தமிழ் தாய் : ரொம்ப நல்ல முடிவு நாரதா. இங்கு படிக்கும் எல்லா தமிழ் குழந்தைகளுக்கும் என்னோட ஆசிகள் எப்பவும் உண்டு.

தமிழ் பள்ளி முதல்வர்: இங்கு வந்திருக்கும் பெற்றோர்களே, நாரதரே தேவலோகத்தை விட்டு விட்டு நம் பாலர் மலர் பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க போகிறார் என்றால் எவ்வளவு பெரிய விஷயம். ஆகையால் நீங்கள் உங்கள் தமிழ் நண்பர்களிடம் எல்லாம் சொல்லி அவர்களின் குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பச் சொல்லலாமேநம் பாலர் மலர் 4 பள்ளிகளிலிருந்து 5 பள்ளிகளாக உயர்ந்து இருக்கிறது. அது மேலும் மேலும் உயர உங்களின் ஆதரவு என்றென்றும் வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்.

(எல்லோரும் - வாழ்க தமிழ்! வளர்க தமிழ் என்று சொல்லுகிறார்கள்)

50 comments:

  1. Replies
    1. வாங்க வாங்க பொறுமையாக வாங்க...

      Delete
  2. ‘நாரதரின் சிட்னி விஜயம்’ நாடகம் மூலம் நம்மவர்களில் பலர் தமிழில் வீட்டில் பேசும்போது கூட தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுவதை நையாண்டி செய்திருப்பதை இரசித்தேன். இந்த நாடகம் மூலம் பாலர் மலர் தமிழ் பள்ளிகளில் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதையும், மேலும் பாலர் மலர் 4 பள்ளிகளிலிருந்து 5 பள்ளிகளாக உயர்ந்து இருக்கிறது என்பதையும் அது மேலும் மேலும் உயர எல்லோருடைய ஆதரவு என்றென்றும் வேண்டும் என்பதையும் தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  3. தங்கள் குழந்தைகள் நாடகம் அருமை. இது விளம்பரமாக கடைசியில் இருந்தாலும் செய்ய வேண்டிய இடம் அங்கு அல்லவா, எப்படியேனும் என் தமிழ் வளர்த்தால் சரியே, முதல் முயற்சி அருமையாக உள்ளது.அப்புறம் நாரதர் இங்கிலீஷ் தெரியாமல் பதில் மட்டும் சொல்கிறார். ஒ ,,,,,,, அவர் தெய்வம் அல்லவா?. நடக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வகையில் பார்த்தால், கண்டிப்பாக இந்த நாடகம் விளம்பரம் தான் சகோ. 37 ஆண்டுகளுக்கும் மேலாக பாலர்மலர் தமிழ் பள்ளிக் கல்விக்கழகம், தொடர்ந்து
      தமிழ் சேவை செய்துகொண்டு வருகிறது. ஆனால் வருத்தமான விஷயம் என்னவென்றால், தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின்
      எண்ணிக்கையில் மிக மிக குறைவான எண்ணிக்கையில் தான் மாணவர்கள் தமிழ் படிக்கிறார்கள். அதனால் தான் இப்படி விளம்பரப்படுத்தியாவது
      அந்த எண்ணிக்கையை கூட்டமுடியாதா என்ற ஆதங்கம் தான்.

      ஆரம்பத்துலேயே நாரதர் சொல்லிவிட்டாரே, பட்லர் இங்கிலீஷ்ல தான் பேச வேண்டும் என்று.

      தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  4. அருமை நண்பரே! நல்ல கருத்துடன் அமைந்த நாடகம். குழந்தைகளுக்கு ஏற்ற ஒன்று. பெரியவர்களுக்கும் தான்...அதுல ஒரு பஞ்ச்....பெற்றோருக்கு ஆத்திச்சூடில எல்லாம் டெஸ்ட் வைக்கணும்...ஃபெயில்தான்....அஹ்ஹாஹ் மிகச் சரியே.....ரொம்ப ரசித்தோம் நண்பரே! இப்படியெல்லாம் கூட நீங்கள் அங்கு உங்கள் குழந்தைகளைத் தமிழ் கற்க வைக்கின்றீர்களே....இங்கு நினைத்துப் பார்த்தோம்....ம்ம்ம்ம் தொடருங்கள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசித்ததைக் கண்டு மிக்க மகிழ்ச்சி சகோஸ். கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

      Delete
  5. வணக்கம்
    அண்ணே.....

    நாடகத்தின் உரையாடல் மிக அற்புதமாக உள்ளது ஆங்கில வடிவத்திலும் தமிழ் வடிவத்திலும் கலக்குது..அண்ணே
    பகிர்வுக்கு நன்றி
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறகடிக்கும் நினைவலைகள்-8:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  6. குழந்தைகளின் தமிழ் கல்விக்கு சிறப்பான நாடகம். பிள்ளைகள் வீட்டில் தமிழ் பேச பெற்றவர்களின் உரையாடல் முக்கியம் என்பதையும், அதை குழந்தைகள் அழகாய் புரிந்து வைத்திருக்கிரார்கள் என்பதை நயமாயும்...நாடகத்தில் உரைத்திருக்கிறீர்கள் சகோ அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  7. தமிழ் வளர்க்கும் தங்களின் தொண்டுக்கு வாழ்த்துகள்.
    நாடகம் சிறப்பு + சிரிப்பு.

    //அவர்களுடைய அப்பா அம்மா அவுங்களோட இங்கிலிஷ்லேய பேச மாட்டர்கள். ஆனால் என்னோட அப்பாவும் அம்மாவும் தமிழ்லேய பேச மாட்டார்கள். அதனால் தான் எனக்கு தமிழில் பேச புடிக்கலை//

    ஸூப்பர் நண்பரே நெத்தியடி

    இந்தியன் படத்துக்கும், எந்திரன் படத்துக்கும், என்ன வித்தியாசம் என்று யாருக்காவது தெரியுமா ?

    இந்தியன்ல ஹீரோ வை தாத்தா வாக காட்டுவாங்க, எந்திரன் தாத்தா வை ஹீரோவாக காட்டுவாங்க.

    தாங்கள் நாரதர் வேஷமிட்டுருக்கும் புகைப்படம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நான் எந்த வேஷம் போட்டாலும் அருமையாகத்தானே இருக்கும்.
      தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  8. //இந்தியன்ல ஹீரோ வை தாத்தா வாக காட்டுவாங்க. எந்திரன் தாத்தா வை ஹீரோ வாக காட்டுவாங்க.//

    நீங்கள் எழுதிய இந்த வசனம் சில நாட்களுக்கு முன் முகநூலில் பரவலாக உலாவியது..... நான்கு வருடங்களுக்கு முன்பே நீங்கள் இதை யோசித்திருக்கிறீர்கள்... சூப்பர் சார்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சரவணன்

      Delete
  9. இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் மூன்றிலும் முன்னணியில் உள்ளீர்கள் சொக்கரே! தொடரட்டும் .
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்றெல்லாம் என்னால் கவிதையை படைக்க இயலாது.
      தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  10. முதலில் பெற்றோர்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்க வேண்டும்... ஹா... ஹா... பெற்றோர்கள் எவ்வழியோ குழந்தைகளும் அவ்வழி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி.

      Delete
  11. சூப்பர் நாடகம் ஆனா சூப்பர் ஸ்டாரை இப்படி வாரிட்டு இருக்கீங்களே.....

    ReplyDelete
  12. அருமை அருமை நண்பரே
    நன்றி

    ReplyDelete
  13. அருமையான நாடகம். நல்ல கதைக்கரு. மாணவர்களை ஈடுபடுத்திய பாங்கு பாராட்டத்தக்கது. அனைத்திற்கும் மேலாகத் தாங்கள் இவ்வாறாகப் பதிந்த விதம் நன்று.

    ReplyDelete
  14. வணக்கம்
    இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
    http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_18.html?showComment=1426634644356#c423202049139672746

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  16. உண்மையானவரே பாலமகிபக்கங்களில் வந்து உண்மையைச் சொல்லும்

    ReplyDelete
  17. மிக அருமையான கற்பனை நாடகம் ! " தமிங்கிலீஸ் " மிக அருமையாக பகடி செய்யப்பட்டு, சிந்திக்கவும் வைக்கிறது !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
    http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
  18. அருமையான நாடக பதிவு எனது வலைப்பூவுக்கும் நேரம் கிடைக்கும் போது வருகை தாருங்கள்.

    ReplyDelete
  19. சொக்கன் சார் என்ன ஆயிற்று? வேலைப் பளுவா? வலைப்பக்கம் காணவில்லையே! வீட்டில் எல்லோரும் நலம் தானே! விரைவில் வருக...கில்லர்ஜியும் உங்களைத் தேடுகின்றார்.....

    ReplyDelete
  20. என்ன ? ஆச்சு லீவு போதாதா ?

    ReplyDelete
  21. அன்பு நண்பரே
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
  22. அன்புடையீர்,
    வணக்கம், எங்கே தங்களைக் கானோம், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  23. வாருங்கள் நண்பரே! பதிவினை காண்பதற்கு!
    பாரிசில் பட்டிமன்ற தர்பார் வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
    நட்புடன்,
    புதுவை வேலு
    வணக்கம்

    ReplyDelete
  24. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  25. நாளை இரவு ஆஸ்திரேலியா வருகிறேன்.

    ReplyDelete
  26. நாடகம் அருமை தோழர்

    ReplyDelete
  27. அன்புள்ள சகோதரர் சொக்கன் சுப்ரமணியன் (சம்பந்தம்) அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள கட்டுரைகளை தமிழ்மணத்தில் வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (15.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 15ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/15.html

    xxxxxxxx

    ReplyDelete
  28. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (15/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு: http://gopu1949.blogspot.in/


    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  29. அட .........

    நாரதரை நாராயணன் தேடிக்கொண்டிருக்கிறார்.

    இன்னும் எவ்வளவு நாட்கள்தான் சிட்டினியிலே பிடித்து வைக்க உத்தேசம்..?

    விருந்தும் மருந்தும் மூன்றுநாள் எனத் தமிழ் கூறுவது தெரியாதா..?

    மூன்று மாதம் ஆகிறது!!!!

    அவரை வழியனுப்பி வைத்துவிட்டு கொஞ்சம் பதிவுலகிற்கு வாருங்கள் ஆசானே!


    காத்திருக்கிறேன்.


    நன்றி

    ReplyDelete
  30. வணக்கம்

    தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  31. வணக்கம்

    இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

    உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

    நன்றி

    ReplyDelete
  32. நண்பரே என்ன ? ஆச்சு

    ReplyDelete
  33. நண்பரே ஏன் ? வலையுலகம் வரவில்லை.....

    ReplyDelete
  34. தொடர்கிறேன்..நன்றி

    ReplyDelete
  35. ஐயா வணக்கம்.

    நலம் தானே?

    தங்களின் பதிலுக்கும் பதிவிற்கும் ஆவலுடன் உள்ள பலருள் ஒருவனாய்!

    ReplyDelete
  36. என்னாச்சு நண்பரே பதிவுகள்...

    ReplyDelete
  37. நாடகம் இன்னுமா ? முடியவில்லை

    ReplyDelete
  38. வணக்கம்,
    இந்த நாடகத்தை ஒட்டி சிறுவர்கள் தமிழ் பாடசாலையில் ஒரு நாடகத்தை அமைக்கவுள்ளோம். உங்களது அனுமதியை வழங்க முடியுமா ? மிக்க நன்றி .

    ReplyDelete