Wednesday, June 4, 2014

ஒரு வயது குழந்தைகளை வரவேற்போம் - வலைச்சரத்தின் மூன்றாம் நாள்

வலைச்சரத்திற்குள் சென்று பார்க்காத நண்பர்களுக்காக,


இன்றைக்கு நான் வலைப்பூ உலகில் பிறந்து ஒரு வயது கூட நிறைவடையாமல் இருக்கும் குழந்தைகளையும் மேலும் ஒரு வயதே ஆன குழந்தைகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன். இதில் சில குழந்தைகள் தங்களின் வயதுக்கு மீறிய வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள் (100க்கும் அதிகமான படைப்புகளை படைத்திருக்கிறார்கள்) இருப்பினும் அவர்களை நாம் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டோம். அதனால் அவர்களை மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களின் பார்வை அந்த குழந்தைகளின் மீது பட வேண்டும் என்று எண்ணுகிறேன். என்னையும் இப்படித்தான் ஸ்கூல் பையன் அவர்கள் உங்களிடம் அறிமுகப்படுத்தியதால், என்னாலும் இந்த அளவு வளர முடிந்தது. அதுபோல் அவர்களும் வளர வேண்டும்.

சரி இனி அந்த குழந்தைகளைப் பார்ப்போமா.மேலும் வாசிக்க....

6 comments:

  1. வணக்கம் சகோ
    வலைச்சரம் சென்று பார்க்காதவர்களுக்காக எனும் தங்கள் சிந்தனை அருமை. பதிவுகள் அறிமுகங்கள் எல்லாம் மிக அருமை. தங்கள் ஆசிரியர் பணியைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். சிறப்பாக செய்வீர்கள் அதிலென்ன சந்தேகம்! வாழ்த்துகளும் நன்றிகளும் சகோதரரே!!

    ReplyDelete
    Replies
    1. இந்த வலைப்பூவை, பதிவர்கள் அல்லாத வாசிப்பவர்களும் வருகிறார்கள். ஒரு வேளை அவர்கள் வலைச்சரத்தில் சென்று பார்க்கவில்லை என்றால் என்ன செய்வது என்று எண்ணி தான், அங்கு எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கொண்டேன்.
      தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  2. உங்கள் எல்லோரையும் பார்த்து... தவழ ஆரம்பித்து இருக்கும் எனக்கு தொடர்ந்து நடை பயில ஆசை வந்திருக்கிறது. அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் ஏற்கனவே நடக்க ஆரம்பித்து, இப்பொழுது குடு குடு என்று ஓட ஆரம்பித்து விட்டீர்கள் (தங்களின் பதிவுகளின் கணக்கைத்தான் சொன்னேன்).

      தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  3. இத்தலைப்பில் அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். அங்கேயும் சொல்லி விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்

      Delete