Tuesday, September 25, 2012

நான் படித்து ரசித்த சிரிப்புத் துணுக்குகள்


ஆண்களுக்கு பிடித்தவை:

மனைவி: நம்ம பையனுக்கு வர்ற தையோட முப்பது முடியுதுங்க. அவன் கல்யாணமே வேணாம்னு சொல்றதை நினைச்சாதான் கவலையா இருக்கு. அவன் யாரையோ மனசுல வச்சுக்கிட்டு சொல்றானோன்னு தோணுது.
 
கணவன்: ''கரெக்ட் மரகதம்! அவன் என்னைய மனசுல வெச்சுக்கிட்டுத் தான் அப்படி சொல்றான். உன்கிட்ட நான் தினம்தினம் படற அவஸ்தையை பார்த்த பிறகுமா நம்ம பையன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவான்"!



ராமு: ''மச்சி! உலகத்துலயே நம்பர் ஒன் சந்தேகப்பிராணி யார்னு கேட்டா அது என் வொய்ப்தாண்டா...''

சோமு: ''மாப்ள! அப்படி என்னடா அவங்களுக்கு உன்மேல சந்தேகம்?''

ராமு: ''புதுசா ஒரு வேலைக்காரிய சேர்த்திருக்கா. அவளை டெய்லி காலையில பத்து மணிக்கு நான் ஆபீஸ் போன பின்னாடி வரச்சொல்லிட்டு, ஈவ்னிங் ஆறு மணிக்கு நான் வீடு திரும்புறதுக்குள்ள போகச் சொல்லிடுறா... ஞாயித்துக்கிழமை வேலைக்கே வரவேணாம்னுட்டா. இப்ப சொல்லு"!.
 
 
ரமேஷ்: ''மச்சான், சிஸ்டர் போன்ல என்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்றாங்கடா... டெய்லி நீ வீட்டுக்கு லேட்டா போறியாமே?''
 
சுரேஷ்: ''தலைவலியும் திருகுவலியும் அவனவனுக்கு வந்தாத்தான் தெரியும்!''
 
ரமேஷ்: ''என்னடா சொல்ற?''
 
சுரேஷ்: ''நீ புதுசா கல்யாணம் ஆனவன்தானே? மவனே, ஆறு மாசம் போகட்டும். அப்புறம் உன் வீட்டுலருந்து எனக்கும் இதே மாதிரியா புலம்பல் போன் வராட்டி என்னை செருப்பாலயே அடி"!
 
 
கணவன்: ''அடியே, அம்மா பாத்ரூமிவழுக்கி விழுந்துட்டாங்களாம்...''
 
மனைவி: ''வயசான காலத்துல ஓய்ஞ்சு ஒரு இடத்துல உட்கார மாட்டாங்களே, அவங்களுக்கு இது வேண்டியதுதான்!''
 
கணவன்: ''விழுந்தது எங்கம்மா இல்லடி, உங்கம்மா!''
 
மனைவி: ''ஐயோ... அவங்க ஓடியாடுறது மேலே எந்த கொள்ளிக் கண்ணுபட்டுச்சோ... பார்த்துகிட்டு நிக்கறீங்களே... போனைக் குடுங்க!''
 
 
சோமு: நான் எது செஞ்சாலும் என் மனைவி குறுக்கே நிக்கிறா!
 
ராமு: பேசாம கார் ஓட்டிப் பாரேன்!!
 
 
மனைவி: டார்லிங்! இன்னைக்கு நம்மளோட கல்யாண நாள். நாம என்ன பண்ணலாம்?
 
கணவன்: எழுந்து நின்னு, ரெண்டு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தலாம். 
 
 
 
பெண்களுக்கு பிடித்தவை:
 
அர்சனா: எதுக்கு உன் மாமியாரை திட்டுற?
ஆராதனா: பின்ன, நான் போன் பண்ணினா நாய் கொலைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வச்சிருக்காங்களே. அதுக்கு தான்.
 
மனைவி: ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு இருக்கும்?''
கணவன்: ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!''
மனைவி: ''அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?''
கணவன்: ''மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது. ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற?
மனைவி: இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்'னீங் களே..! ஆனா, இந்த மாதிரி யாராவது போகும்போது பேந்தப் பேந்த பாக்குறீங்களே... இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணத்தான்.  
 
என்னடா! இதுல கூட ஆண்கள் ரசிப்பதற்கு நிறைய துணுக்குகளையும், பெண்கள் ரசிப்பதற்கு பேருக்கு ரெண்டே ரெண்டு துணுக்குகளை மட்டும் போட்டிருக்கானேன்னு யோசிக்காதீங்க. என்ன பண்றது, இந்த மாதிரி துணுக்குகள் எல்லாம் ஆண்கள் தான் எழுதுறாங்க போல, அதனால தான் நிறைய துணுக்குகள் ஆண்கள் ரசிக்கக்கூடியதாகவே இருக்கு, (அது தான் கண்லேயும் வேற படுது). ஆனா கண்டிப்பா பெண் வாசகர்களை திருப்தி படுத்துறதுக்காக, கண்ல விளக்கெண்ணையை விட்டாவது, பெண்கள் ரசிக்கக்கூடிய துணுக்குகளை தேடிக்கண்டுப்பிடிச்சு பதியுறேன்.
 
 
 

No comments:

Post a Comment