Wednesday, August 7, 2013

பதிவர்கள் மாநாடு – 2013


இந்த வருடம் ஆரம்பத்திலிருந்தே நிறைய தமிழ் சம்பந்தப்பட்ட மாநாடுகள் என் கண்ணில் பட்டுக்கொண்டிருக்கிறது. மலேஷியாவில் 10வது உலக தமிழ் மாநாடு நடந்து முடிந்தது. அதில் அடியேனும் ஒரு கட்டுரையை சமர்பித்திருந்தேன். அடுத்த மாதம் இங்கு சிட்னியில் உலக தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற இருக்கிறது. அதிலும் நான் எழுதிய “புலவர்களின் பார்வையில் சங்ககால போர்கள்” என்ற கட்டுரை மாநாட்டு மலரில் வெளிவர இருக்கிறது. இந்த மாதம் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 12வது உலக தமிழ் இணைய மாநாடு மலேஷியாவில் நடக்க இருக்கிறது. இப்படி எனக்கு தெரிந்து தமிழை சம்பந்தப்படுத்தி நிறைய மாநாடுகள் நடக்கிறது. சென்னையில் அடுத்த மாதம் 1ஆம் தேதி வலைப்பூ பதிவாளர்கள் ஒரு மிகப் பெரிய சந்திப்பை நடத்துகிறார்கள். சென்ற ஆண்டும் அவர்கள் மிகச் சிறப்பாக பதிவர்கள் சந்திப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள். அதில் பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்திருக்கிறது. மேலும் ..... 

No comments:

Post a Comment