Wednesday, July 18, 2012

நண்பரின் தன்னம்பிக்கையூட்டும் கவிதை

என்னோட மனப்பாரத்துக்கு அந்த  "நிம்மதி" கவிதை ஒரு வடிகாலாக அமைந்தது. ஆனால் அந்த கவிதையை படித்துவிட்டு நண்பர்கள்  வருத்தம் அடைந்ததினால், நண்பர் திரு. அண்ணா சுந்தரம் அவர்கள் தன்னோட தன்னம்பிக்கையூட்டும் கவிதையை பதியுமாறு கேட்டுக் கொண்டார்.
நண்பர்களே! வாழ்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. திரு. அண்ணா சுந்தரத்தின் இந்த கவிதை உங்களுக்குள் ஒரு  தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்  என்ற நம்பிக்கையில் அந்த கவிதையை பதிக்கிறேன்.

நிம்மதியே! நீ என்னுள்
நீண்ட நாள் இருக்க
இறைவன் எனக்கு
தந்துவிட்டான் தெம்பினை!

இந்த உலகில் நீ
எங்கும் ஒளிய முடியாது
முடிந்தால் நிலவில்
ஒளிந்து பார்
உன்னை நான்
சந்திக்கிறேன்.

             -  அண்ணா சுந்தரம்

1 comment:

  1. நாங்க இப்போ ஒங்ககிட்ட கவிதை கேட்டோமா? நீங்க வர வர எங்களோட பொறுமைய ரொம்ப சோதிக்கிறீங்க ... சொல்லிபுட்டேன் .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete