Thursday, October 17, 2013

கண்ணம்மாப்பேட்டை - மேடை நகைச்சுவை நிகழ்ச்சி

இதுவரை சிட்னியில், ஐந்து  நகைச்சுவை குறு நாடகங்களையும்  ஒரு மேடை நகைச்சுவை நிகழ்ச்சியையும் எழுதி அரங்கேற்றியிருக்கிறேன். இது தவிர குழந்தைகளுக்கான குறு நாடகங்கள் தனி.

அதில் "கண்ணம்மாபேட்டை" என்ற இந்த நகைச்சுவை மேடை நிகழ்ச்சியை உங்களின் பார்வைக்கு பதிகிறேன்.

நம் எல்லோருக்கும் சிங்காரச் சென்னையில் கண்ணம்மாப்பேட்டை என்றால் "ஒரு சுடுகாடு" என்று தான் நியாபகத்துக்கு வரும்.  ஆனால் அதுவும் ஒரு ஏரியா. அந்த ஏரியாவில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறேன்.



இடம் - (கண்ணம்மாப்பேட்டை, அம்பேத்கார் தெரு, முனியம்மா கையேந்திபவன் இட்லி கடை)

(முனியம்மா உட்கார்ந்து கொண்டு இட்லி அவிக்கிறார். அப்போது பிளேடு பக்கிரி வருகிறார்)
முனியம்மா – என்னா! அரை பிளேடு, எப்படி கீறே?

பக்கிரி – முனிமா, உனக்கு கொய்ப்பு ரொம்ப ஜாஸ்தியா பூச்சு. இன்னொரு தபா அரை பிளேடுன்னு, கூப்பிட்டாங்காட்டியும், பொம்பளைன்னு பாக்க மாட்டேன்,செவுளு எகிறிடும்.

முனியம்மா – மன்சுக்கோ அண்ணாத்தே, இதுக்கு போய் கோச்சுக்கினுகிரீயே. ஆமா எப்படி கீறே?

பக்கிரி – நான் நல்லா கீரேன் தங்காச்சி. சரி, உன் வாவாரம் எப்டி போயிக்கினுகீது ?

முனியம்மா – அதை ஏன் கேக்குற? இந்த புறம்போக்கு பேமானிங்க எல்லாம் கடன்ல துன்னுட்டு போகுதுங்க. அதுங்ககிட்ட காசை வாங்குறதுக்குள்ள பேஜாரா கீது.

பக்கிரி – நீ, கரார சொல்லு தங்காச்சி, கடன் சொன்னா கட்டைல அடிப்பேன்னு.

முனியம்மா – ஆமா அண்ணாத்தே, இனிமேங்காட்டி, அப்படி தான் சொல்லப் போறேன்.
பக்கிரி – சரி, முனிமா, எனக்கு ஒரு 10 இட்லியை கொடு, நான் துன்றேன், ரொம்ப வவுத்தை பசிக்குது.

முனியம்மா – உனக்கு எல்லாம் இட்லி கொடுக்க முடியாது.
பக்கிரி – நான் கடன்ல துன்னாமாட்டேன் தங்காச்சி. இந்தா 10 இட்லிக்கு காசு.

முனியம்மா – அதுக்கில்லை அண்ணாத்தே! நீ பாட்டுக்குன்னு, இங்க இட்லியை தின்னுட்டு உன் ஊட்ல போய் ஒண்ணும் துன்ன மாட்டேங்கிரியா, உன் சம்சாரம் இங்க வந்து என்னாண்ட சண்டை போடுது. பெரிய ரௌசா கீதுபா.

பக்கிரி – ஐயே, அவ செய்ற இட்லியை மனுஷன் துண்ணூவானா. ஒண்ணு தெரிமா, அவளுக்கு கோவம் வந்தா, அவ செஞ்ச இட்லியால தான் என்னைய அடிப்பா. முனிமா, இன்னொரு தபா, அவ உன்கிட்ட ராங்கு பண்ணா, பேசாம நீ ரெண்டு போடு போட்டு அவளை ஊட்டுக்கு அனுப்பு.

முனியம்மா – என்னய்யா நீ, பொண்டாட்டிய அடக்க தெரில. சரி, சரி, இந்தா இட்லியை நல்லா துண்ணு (இட்லி தருகிறார்). ஆமா, எங்க உன் கூட்டாளி பாக்ஸர் பாலு, ரொம்ப நாலா, கடையாண்ட காணோம்.
பக்கிரி – ஐய, உனக்கு மேட்டர் தெரியாதா, அவன் சினிமால நடிச்சிக்கிணுக்கிறான்.

முனியம்மா – மெய்யாலுமா, அண்ணாத்தே, அண்ணாத்தே, அவருக்கிட்ட சொல்லி, எனக்கு ஒரு சான்ஸ் வங்கி கொடேன்.
பக்கிரி – அட போம்மே. அந்த பொறம்போக்கு, எனக்கே ஒரு சான்ஸ் வங்கி தர மாட்டேண்கிறான்.  

(அப்போது பாக்சர் பாலு வருகிறார்)
பாலு – ஹலோவ், ஹௌவு ஆரு யூ?

பக்கிரி – என்னா, பாக்சரு, பெரிய, பெரிய இங்கிலிசு எல்லாம் பேசிக்கினு கீற?
பாலு – வாட் ஐ யாம் ஒன்லி இசுமாலு இங்கிலீஷ்.

பக்கிரி – அட்ரா! அட்ரா, பெரிய ஹீரோ ஆவுரியோ இல்லையோ, இங்கிலிசு வெளுத்துக் கட்டுற. ஆமா, உன் கைல எத்துன படம் வச்சுக்கினுகீற?
பாலு – டூ ஃபிலிம் அப்புரங்காட்டி ஒரு ஆடு ஃபிலிம்.

பக்கிரி – அடப் பாவமே, உனக்கு ஏண்டா இந்த பொய்ப்பு?
பாலு – வாட் பாவம், ஐ நாட் understood,

பக்கிரி – ஏண்டா, போயும், போயும் ஆடு கூடவா நடிச்சிக்கினுகீற?, நான் கூட நீ அஞ்சலி , அப்புறம் ஏன் தங்காச்சி, இந்த நெடு நெடுன்னு ஓசரமா ஒரு பொண்ணு இருக்குமே அது யாரு?

முனியம்மா – ஆங்! அந்த பொண்ணா, அது அனுஷ்கா அண்ணாத்தே.
பக்கிரி – ஆமா, அனுஷ்கா கூட எல்லாம் நடிக்கிரியாக்கும்னு பார்த்தா, கஸ்மாலம், ஏண்டா ஆடு கூட எல்லாம் நடிக்கிற?

பாலு – நோ நோ, யூ mistakifying மி. யூ நாட் know ஆடு பிலிம்ஸ்.ஆதான்பா இந்த சோப்பு, பவுடர், காம்ப்ளான், இந்த மாதிரி பபிலிம்ஸ்.
பக்கிரி – ஓ! விளம்பரப் படமா, என்னா படம்டா? அப்புறம், உன் பைய தொழிலை மறக்காம இந்த சோப்பு, பவுடர் எல்லாம் தள்ளிக்கிட்டு வந்துடு என்னா!

பாலு – யூ, ஆல்வேஸ் selfinished.
பக்கிரி – என்னாது, self எல்லாம் சுட்டுக்கினு வந்துட்டியா. என்னாப்பா, உன் தோஸ்து நானு, எனக்கு ஒரு செல்ஃபை சுட்டுக்கிட்டு வந்துக் கொடேன்.

பாலு – யூ. Are ரொம்ப புவர் இங்க்லிஷ்.
பக்கிரி – ஏய், ஆரைப் பார்த்து புவர்ன்னு சொல்ற, நானா புவரு. இங்க பாரு எத்தனை மோதிரம் போட்டுக்கிணுக்கிறேன், செயினு போட்டுக்கிணுக்கிறேன்.

பாலு – நோ, நோ யூ நாட் knowing மி இங்கிலீஷ். மை ஆல்சோ நாட் knowing before பட் after after supririor.
பக்கிரி – ஓ! இதான் மேட்டரா, அப்போ, இங்கிலிசு தெரிஞ்சா சூப்பர்வைசர் ஆயிடலாங்கிற. சரிப்பா, நானும் என் தொழிலலை விட்டு இங்கிலிசு கத்துக்கிறேன். இந்த போலீஸ் மாமா நாயிங்களுக்கு மாமூல் வெட்டியே தாவு தீருது.

பாலு – சொன்னா, ஆங்கர் படுற. இங்கிலீஷ் படிச்சா ஹை ஆயிடுவ, மீ மாதிரி.
பக்கிரி – என்னா நைனா, கொயப்புற. அப்ப என்னடான்னா, இங்கிலிசு படிச்சா, சூப்பர்வைசர் ஆலான்னு  சொன்ன, இப்பங்காடியும் என்னாடான்னா உயரமா ஆலங்குற?

பாலு – again, again யூ are mistaking, அதான் புவர்ன்னு சொன்னேன்.

பக்கிரி – டேய் மாப்ள, புவர்ன்னு மட்டும் சொல்லாதே,எனக்கு கெட்ட கோவம் வரும். நான் அடுத்தவன் பர்ஸை லவட்டுனாலும், சொந்த வூட்டுல இருக்கேன். தெரிஞ்சுக்கோ .
பாலு – (தலையில் அடித்துக்கொண்டு) டேய், போடாங்க, உன் மூஞ்சில என் பீச்சாங்கையை வைக்க, இங்க புவர்னா ஏழை இல்லை. உனக்கு இங்கிலீஷ் knowing avvalvau satisfy இல்ல. இதெல்லாம் இங்க்லிஷ்ல ஃப்ரேஸ்.  
பக்கிரி – ஃப்ரேஸ்னா, ஓ! பிரேஸ்லெட்டா. போன வாரம் தான் ஒருத்தண்ட பிரேஸ்லெட்டை ஆட்டைய போட்டேண்டா.

பாலு – oh! My God, save myself. டேய் அந்த பிரசேலேட் இல்லடா, இது different. யுவர் ஹெட் இஸ் having kalisand
பக்கிரி – இங்கிலிசு வாத்தியாரே, எனக்கு சினிமா சான்ஸ் எல்லாம் வேண்டாம். கொஞ்சம் உன் இங்கிலிசை கத்துக் கொடேன்பா,

முனியம்மா – நீ அப்புறம் இங்கிலிசை கத்துக்கோ, பாலு அண்ணாத்தே, ரொம்ப நாள் கைச்சு கடையாண்ட வந்துகிற, இங்க குந்திக்கினு, இட்லியை துண்ணு.
(அப்போது “சவுண்ட்” சரசு வருகிறாள்)

சரசு – இந்தாம்மே, இட்லி கொடு.
(முனியம்மா தட்டில் இட்லி வைத்துக் கொடுக்கிறார்)

பக்கிரி – டேய், உன் இங்கிலிபிசை, எனக்கு கொஞ்சுண்டு கத்துக் கொடேன். நானும் என் சம்சாராத்தாண்டை போயி, படம் காட்டுறேன்.
பாலு – I have time no. Each day morning வேற சூட்டிங். Evening வேற சூட்டிங். Sorry, I very very busy.

பக்கிரி – இப்ப, என்னா சொல்ல வர்ற, இங்கிலிபீசு கத்துக்கொடுக்க முடியாதுங்கிறியா?
பாலு – yes. yes you சரியா understood.

பக்கிரி – டேய் மவனே, இன்னொரு தபா, என்னாண்ட நீ இங்கிலிபீசு பேசுன, அப்புறம் உனக்கும் எனக்கும் ராங்கா பூடும்.
(அப்போது சரசு சாப்பிட்டு எழுந்து போகிறாள்)

முனியம்மா – ஏய், ஏய், இந்தாம்மே துன்னுட்டு, துட்டு கொடுக்காம நீ பாட்டுக்கு போயிக்கினுக்கீற?
சரசு – ஆங்! என்னாத்துக்கு துட்டு கொடுக்கோனும்.

முனியம்மா – என்னாத்துக்கா, இட்லியை துன்னயில்ல, அதுக்கு தான்.
சரசு – யாரண்ட துட்டு கேக்குற, நான் யாரு தெரிமா?

முனியம்மா – ச்சீ கஸ்மாலம், நீ யாரா வேணா இரு. துட்டை வச்சுட்டு, அந்தாண்டை நகரு.
சரசு – ஏய் கைதை, ஆரப்பாத்து  கஸ்மாலாம்னு சொல்ற, நீ தான் கஸ்மாலம். புளியந்தோப்பாண்ட வந்து பாரு, இந்த “சவுண்ட்” சரசுஆருன்னு தெரியும்.

முனியம்மா – ஐயே! நீ ஓசில துன்ற கேசா! அதான் உடம்பு இப்படி கீது.
சரசு – இன்னொரு வாட்டி, என்னையப் பத்தி தப்பா பேசுன,செவுலு பிகிலாயிடும். (மெல்லமாக) இந்த தடிப் பசங்க, அதுக்குள்ள போயித் தொலஞ்சுட்டாணுங்க. இல்லைன்னா இதை இங்கேயே பாடை கட்டியிருக்கலாம்.

பக்கிரி – புளியந்தோப்பு சவுண்ட் சரசுன்னா பெரிய கொம்பா, துட்டு கொடுக்காம துன்னுட்டு, ஆருக்கிட்ட சவுண்ட் விடுற?
பாலு – I will police call.

பக்கிரி – டேய், டமிலு, டமிலு.
பாலு – இப்ப துட்டை வைக்கப்போறியா இல்லாங்காட்டி போலீசை இட்டாரட்டுமா.

பக்கிரி – மாமு, நீ என்ன போலீசை இட்டாந்துக்கினு, இதோ நம்ம ஏட்டு கனகாம்பரமே வந்துகிணு கீது.
(அப்போது ஏட்டு ஏகாம்பரம் வருகிறார்)

பாலு – என்னா, ஏட்டு கனகாம்பரம் எப்படி கிற? மாமுலு ஜாஸ்தியா வந்துகிணு கீது போல.
ஏட்டு – டேய், என் பேரு கனகாம்பரம் இல்ல, ஏகாம்பரம்னு எத்தன தபா சொல்லிக்கிறேன். ச்சை, நீ தொழிலை வுட்டுபுட்டு நடிக்க போயிட்ட. எப்பவாச்சும் ஒரு தபா என்னாண்ட மாட்டாமலா பூடுவே, அன்னைக்கு வச்சுக்கிறேன் கச்சேரியை.

முனியம்மா – முதல்ல இந்த கச்சேரியை கவனி ஏட்டு. இதோ இது துன்னுட்டு, துட்டு கொடுக்காம போது.
(ஏட்டு அந்தப் பக்கம் நகர்கிறார். அப்போது பக்கிரி அவரின் மணிப்பர்சை லவட்டிக்கொள்கிறான்)

ஏட்டு – என்னாம்மே! துன்னுட்டு துட்டுக் கொடுக்காம போறியா?
சரசு – நீ தான் ஏட்டா!, என்ன மப்டில வந்துக்கினியா. ஆமா எந்த டேஷனு. (யோசிக்கிறார்) கண்ணம்மாப்பேட்டைல K2 டேஷன் தான் இருக்கு. (உடனே போன் எடுத்து டயல் பண்ணுகிறார்)

ஏட்டு – (குழப்பமாக) ஏய், ஏய், ஆரு நீ? ஆருக்கு போன் போடுற?
சரசு – ஊம், உன் கமிஷனருக்கு. நான் ஆருன்னா கேட்ட? நான் தான் புளியந்தோப்பு சவுண்ட் சரசு.

ஏட்டு – நீங்க தான் புளியந்தோப்பு சவுண்ட் சரசா, அதை முன்னாலே சொல்லா கூடாதா, ஆமா நீங்க இங்க எப்படி?
சரசு – எனக்கு பயந்துக்குனு, அந்த முட்டை ரவி இங்க வந்து ஒளிஞ்சுக்கினு இருந்தான். வுடுவாளா இந்த சரசு, அதான் பசங்களை கூட்டிக்கிட்டு வந்து அவன் ஜோலியை முடிச்சேன். பசங்க அவன் கூட்டாளியை ஸ்கெட்ச் போடுறதுக்கு பூட்டாணுங்க, எனக்கு பசிச்சிதா அதான் இந்த கஸ்மாலத்தாண்ட வந்து இட்லியை துன்னேன். இது என்னடான்னா துட்டு கேக்குது.

ஏட்டு – நீங்க போங்க. நான் பார்த்துக்கிறேன்
சரசு – நான் ஆருங்குறதை, இதுக்கிட்டேயும், அந்த பேமானிங்க கிட்டேயும் சொல்லு.

(சரசு போகிறாள்)
ஏட்டு – (மெல்லமாக) ச்சை, இவளுக்கு மேட்டர் முடிக்க, நம்மா ஏரியா தான் கிடச்சுதா, ஐயோ, இனி அந்த இன்ஸ்பெக்டரு நம்ம கழுத்தை அறுப்பானே.

முனியம்மா – என்னா ஏட்டு, எனக்கு பஞ்சாயத்தை பண்ணுவன்னு பாத்தா, அதை போகவிட்டுட்டே.
ஏட்டு – (கோபமாக) அவ என்ன சொன்னான்னு கேட்ட இல்ல, அது புளியந்தோப்பு தாதா. உன் நல்ல நேரம் அது உன்னைய ஒண்ணும் பண்ணலை . இனிமேங்காட்டி அதுக்கிட்ட வச்சுக்காதே. சரி, நான் வரேன்.

(ஏட்டு போகிறார், முனியம்மா தலையில் கையை வைத்துக் கொள்கிறாள்)
பக்கிரி – தங்ச்சி, இந்த உன் துட்டு, ஏட்டுக்கிட்டேருந்து லவட்டுனது.

முனியம்மா – எட்டுக்கிட்டையே, உன் கைவரிசையை காட்டிட்டியா அண்ணாத்தே.
பக்கிரி – தொழிலின்னு வந்தா ஏட்டு என்னா, பெண்டாட்டி என்னா, எல்லார்க்கிட்டேயும் கைவரிசையை காட்டிடுவான் இந்த பக்கிரி.

பாலு – ஏய், பக்கிரி, பர்சு கனமா இருக்கு. வா வா டாஸ்மார்க்குக்கு போலாம்.
(இருவரும் போகிறார்கள்)

3 comments:

  1. மெய்யாலுமே சோக்கா கீதுபா...! பேசாம பிலிம் எடுக்லாம்பா நீ... அவ்ளோ சரக்குகீதுபா ஒன்னாண்ட...!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சந்தோஷமா கீதுப்பா. என் கடையாண்ட வந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்ப்பா

      Delete
  2. சென்னைத்தமிழில் புகுந்து விளையாடியிருக்கிறீர்கள். மொழி சரளமாக வருகிறது உங்களுக்கு. பாராட்டுகள் சொக்கன்.

    ReplyDelete