Sunday, April 7, 2019

கல்லூரியின் 25ஆம் ஆண்டு-நினைவுகளின் ஓர் சங்கமம் - 2


                                                            மினி சந்திப்பு                                                                                 (நானும் செல்லப்பாவும் டயட் கண்ட்ரோல்...)

முதல்  பகுதியை படிக்காதவர்கள் - பகுதி-1


அந்த கடினமான வேலை என்னவென்றால், தீர்க்கதரிசி அதிரா அவர்கள் கூறியது போல் எல்லோரையும் எப்படி ஒரே நாளில் ஒன்று சேர்ப்பது என்பது தான். எங்களை ஒன்று சேர்ப்பதற்கு முன்பு, முதலில் கல்லூரியிலிருந்து அனுமதியைப் பெற்று, கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் அவர்களின் தேதியையும் அறிந்து கொண்டு, பின்னர் எல்லோரிடமும் மே,ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மூன்று மாதங்களில் ஏதாவது ஒரு மாதத்தில் விழா நடத்தலாம் என்று ஒவ்வொரு துறையின் பிரதிநிதிகளிடம் சொல்லி எல்லோரையும் கேட்கச்சொல்லியிருந்தார்கள். ஒரு சிலர் மே மாதம் இறுதி வாரத்திலும், ஒரு சிலர் ஜூன் மாதத்திலும்  வைக்கலாம் என்று கூறி குட்டையை குழப்ப ஆரம்பித்து விட்டார்கள். இறுதியில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, ஜூன் மாதம் 10ஆம் தேதி என்று முடிவானது.

இங்கு எங்கள் துறையில் படித்தவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். நாங்கள் மொத்தம் 21 மாணவ,மாணவியர்கள் கணிணித்துறையில் பயின்றோம். அதில் இருவர் மாணவிகள். நான் ஆஸ்திரேலியாவிலும், செல்வம், பழனியப்பன் மற்றும் தாமோதரன் மூவரும் சிங்கப்பூரிலும்,வள்ளியப்பன் மற்றும் செல்வதிருப்பதி அமெரிக்காவிலும்,பாண்டி ஐக்கிய அரபு நாடுகளிலும்  வசிக்கிறோம். தேதி முடிவானவுடன், எங்கள் துறையிலிருந்து 13 பேர் நாங்கள் கலந்துக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். நான் மட்டும் இருதலைக் கொள்ளியாகவே நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தேன். அதற்கு காரணம் வியாபாரத்தை விட்டுவிட்டு எப்படி வருவது என்பது தான். நண்பர்கள் ஒவ்வொரு முறையும் பேசும்போது கண்டிப்பாக வந்துவிடு என்று தூபம் போட்டுக்கொண்டிருந்தார்கள். அம்மணி தான் கண்டிப்பாக நீங்கள் கலந்துகொள்ளுங்கள், நான் வீட்டையும், வியாபாரத்தையும் பார்த்துக்கொள்கிறேன் என்று எனக்கு தைரியத்தையும், உற்சாகத்தையும் அளித்து என்னை வழியனுப்பினார்கள்.

என்னுடைய பயணத்திட்டமானது, ஜூன் 5ஆம் தேதி சிட்னியிலிருந்து கிளம்பி சென்னை சென்று, 6,7 இரண்டு நாட்கள் சென்னையில் தங்கி, உறவினர்களை சந்தித்துவிட்டு, ஷாப்பிங் செய்துவிட்டு, 8ஆம் தேதி கரூர்க்கு போய் (மாமனார் வீட்டுக்கு போகாமல் போனால் என்னவாவது!!) அங்கேயிருந்து 9ஆம் தேதி மதியம் தேவகோட்டைக்கு சென்று, இரண்டு நாட்கள் அங்கே தங்கிவிட்டு, 11ஆம் தேதி இரவு மீண்டும் சென்னைக்கு திரும்பி 12ஆம் தேதி கடைசி நேர ஷாப்பிங் முடித்துவிட்டு அன்று இரவு சிட்னிக்கு விமானம் ஏறுவது தான் பயணத்திட்டம். நான் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மொத்தமாக 9 நாட்கள் அம்மணியிடம் வியாபாரத்தையும், வீட்டையும் ஒரு விதமான தைரியத்தில் ஒப்படைத்தேன்.

5ஆம் தேதி இரவு சென்னை வந்தவுடன் மறு நாள் நண்பர் செல்லப்பவை மட்டும் சந்தித்துவிட்டு (20 ஆண்டுகள் கழித்து இவரை சந்தித்தேன்), பர்சேஸ் எல்லாம் செய்து கொண்டு, நடுநடுவில் உறவினர்களையும் சந்தித்து முடித்தேன். 7ஆம் தேதி இரவு நண்பர் சிதம்பரம் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாரை சந்தித்தேன். சிதம்பரத்துக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவரின் மாமனார் ஊரும் கரூர் தான். (செல்லப்பா,சிதம்பரம், மற்றும் முத்துகுமார் சென்னையில் வசிக்கிறார்கள்.) செல்லப்பாவும், முத்துக்குமாரும் அசோக் நகரிலிருக்கும் சரவண பவனுக்கு வந்துவிடுகிறோம் என்று கூறியிருந்தார்கள். அதனால் சிதம்பரம் வீட்டில் மாலை பலகாரத்தை(?) மட்டும் முடித்துக்கொண்டு நேராக சரவண பவனுக்கு சென்றோம். அங்கு நால்வரும் இரவு உணவை முடித்துக்கொண்டு சிறிது நேரம் மலரும் நினைவுகளை எல்லாம் அசைபோட்டுவிட்டு மற்ற மூவரும் என்னை கரூர் செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டு வீடு திரும்பினார்கள்.

 8ஆம் தேதி காலை கரூர் சென்றடைந்தேன். அங்கு அடுத்த நாள் மதியம் வரை இருந்துவிட்டு, தேவகோட்டைக்கு கிளம்பினேன். கரூரிலிருந்து காரைக்குடி,தேவகோட்டைக்கு செல்வதற்கு பொதுவாக எல்லோரும் திருச்சி வழியாகத்தான் செல்வார்கள். ஆனால் நான் அவ்வாறு செல்லாமல் வேறு மார்க்கமாக சென்றேன். நண்பர்கள் சிலர், கல்லூரி நாட்களில் என்னையும் இன்னொருவரையும் இணைத்து காதல் பறவைகள் வந்து விட்டார்கள் என்று கூறுவார்கள். அந்த காதலியை பார்பதற்காகத்தான் நான் வேறு மார்க்கமாக  சென்றேன். அந்த காதலி யார் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன். 

பி.கு: இந்த பதிவை சென்ற வாரத்தில் இருந்து எழுத வேண்டும் என்று நினைத்து எழுத முடியாமல் போய் விட்டது . கண்டிப்பாக இன்றைக்கு எவ்வளவு நேரமானாலும் எழுதிட  வேண்டும் என்று நினைத்தேன், காரணம் நாளைக்கு ஒரு மணி நேரம் கூட தூங்கலாம் (நாளைக்கு டே லைட் சேவிங்க் முடிவடைகிறது, அதனால் கூடுதலாக ஒரு மணி நேரம் கிடைக்கும்). கடந்த இரண்டு நாட்களாக நண்பர்களின் தளத்திற்கு செல்ல இயலவில்லை. நாளை முதல் எல்லோரின் தளத்திற்கு வந்து பின்னூட்டம் இடுகிறேன்.   

                           ---தொடரும்


22 comments:

  1. சந்தோசமான மார்க்கத்தை தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. முதலில் வந்து கருத்திட்டமைக்கு நன்றி டிடி.

    ReplyDelete
  3. ஆஹா.... சந்திப்பு பற்றிய பதிவு ஸ்வாரஸ்யம்...

    அந்த சந்தோஷ மார்க்கம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட் சார்

      Delete
  4. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  5. அது "அந்த" மார்க்கமாக இருக்குமோ... என்று நினைக்கிறேன்.

    பல இடத்து நண்பர்களை ஓரிடத்தில் இணைப்பது சாதாரண காரியமில்லை என்பது நானறிந்த அனுபவப்பாடம் நண்பரே வாழ்த்துகள்.

    தேவகோட்டை வந்ததை சொல்லவேயில்லே...? பயமோ...?

    ReplyDelete
    Replies
    1. அது "அந்த" மார்க்கமாக இருக்குமோ - எந்த மார்க்கமோ?


      பயந்தான். உங்க மீசையை புகைப்படத்தில் பார்ப்பகற்கே பயமாக இருக்கும். அப்புறம் நேரில் எப்படி பார்ப்பது?

      Delete
  6. முதல் சந்திப்புக்கு வகுப்புத் தோழர்களை தொடர்பு கொள்வதும், அவர்களை ஒன்று சேர்ப்பதும் எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். முதல் தடவை சந்திப்பின்போது அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் கிடைத்துவிட்டால் அடுத்தடுத்த சந்திப்பை நடத்துவது எளிதாகிவிடும். தாங்கள் தேர்ந்தெடுத்த அந்த மார்க்கம் பற்றிய அறிய தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த சந்திப்பை குடும்பத்தாரோடு சந்திக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். பார்க்கலாம்.

      Delete
  7. பல ஊர்களில் இருப்போரை இப்படி ஒரே இடத்தில் சந்திக்க வைப்பது என்பது அத்தனை எளிதல்ல. சஸ்பென்ஸ் வேறு வைத்துவிட்டீர்கள்! தொடர்கிறோம்!

    துளசிதரன், கீதா

    கீதஆ: அந்தக் காதல் பறவை உங்கள் நண்பராகத்தான் இருக்கும். உங்கள் மனைவி காதல் மனைவி என்பது தெரியுமே!! கரூர் போகாம எப்படி? அதுவும் உங்க மனைவி வியாபாரம் எல்லாம் பார்த்துக்கறேன்னு சொல்லி ஆசையாக வழியனுப்பி வைச்சுருக்காங்க!!!

    அது சரி தீர்க்கதரிசி அதிராவா!! ஹ ஆ ஹா ஹா ஹா அது யாருங்கோ? காசி ட்ரிப் ஆர்கனைசரா வலம் வரவங்களையா சொல்லறீங்க!! ஹா ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்4 கீதா:)..... ஹையோ பேர் மாற்றத்தைக் காரணம் காட்டி, எனக்குப் பரிசு கிடைக்காமல் பண்ணிடப்போறா போலிருக்கே:)

      Delete
    2. ஐயையோ, எங்கள் திருமணம் பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் தான். மனைவியின் சொந்த ஊர் காரைக்குடி பக்கத்த்தில் இருக்கும் ஆத்தங்குடி. ஆனால் பல ஆண்டுகளாக கரூர் தான் வசிப்பிடம்.

      அட கடவுளே, கொஞ்சமாவது சஸ்பென்ஸ் வைக்கலாம் என்று பார்த்தால் வைக்கவே விட மாட்டேங்கிறீங்களே. அந்த பதிவில் ஆதிரா சகோ, இந்த பதிவில் நீங்களா!!

      Delete
    3. நாங்கள் (2+3) சிட்னியிலிருந்து காசிக்கு போகணும். ஏற்பாடு செய்து தர முடியுமா சகோ? ஏற்பாடு என்றால் முழு செலவையும் நீங்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் உங்களை "kasi trip organiser" என்று ஒத்துக்கொள்வேன்.

      Delete
  8. மகிழ்ச்சியான தருணங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  9. //நானும் செல்லப்பாவும் டயட் கண்ட்ரோல்...)//
    ஹா ஹா ஹா படம் எடுக்கும்வரைதானே?

    ReplyDelete
    Replies
    1. தப்பு , நானும் செல்லப்பாவும் சாப்பிட்டு முடித்த பிறகு எடுத்த படம். தோத்துட்டீங்களா... ஹி.. ஹி...

      Delete
  10. ///அந்த கடினமான வேலை என்னவென்றால், தீர்க்கதரிசி அதிரா அவர்கள் கூறியது போல் எல்லோரையும் எப்படி ஒரே நாளில் ஒன்று சேர்ப்பது என்பது தான். ////
    வாவ்வ்வ்வ்வ்வ் எல்லோரும் ஓடியாங்கோ... பரிசும் என் அலப்பும் எனக்கேஏஏஏஏ:)

    ReplyDelete
    Replies
    1. எங்களுடைய காசி ட்ரிப்பை நீங்கள் ஏற்பாடு செய்வது தான், நான் தங்களுக்கு அளிக்க கூடிய பரிசு.
      ஏற்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று நான் முந்தைய பதிலில் சொல்லியிருக்கிறேன்.

      Delete
  11. "அந்த காதலியை பார்பதற்காகத்தான் நான் வேறு மார்க்கமாக .... " ஓகோ கதை இப்படிபோகுதா!!! .... இவ்வளவு "ரிஸ்க்" எடுத்து நன்பர்களை ஏன் பார்க்க வந்தீர்கள் என்பது நேக்கு இப்போதுதான் புரிகிறது .... இருக்கட்டும்...இருக்கட்டும்... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete